உலகத்துக்கே நாம் விவசாயத்தில் முன்னோடியாக திகழ வழிவகுத்திட வேண்டும்

வரும் 25 ஆண்டுகளில் விவசாயத்தில் மேலும் பலபரிசோதனைகளை நடத்தி உலகத்துக்கே நாம் விவசாயத்தில் முன்னோடியாக திகழ வழிவகுத்திட வேண்டும். இக்ரிசாட் பரிசோதகர்களின் கடந்த 50 ஆண்டுகால பங்கு சிறப்பானது. அவர்களுக்கு எனது பாராட்டுகள். நாட்டில் 80 சதவீதம் சிறுநில விவசாயிகள் உள்ளனர். இவர்கள் பலஇன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். மழை உரியகாலத்தில் பெய்யாவிடில் இவர்கள் பெரும்நஷ்டத்தை சந்திக்கின்றனர். ஆதலால், குறைந்தநீரில் அதிக மகசூல் கிடைக்கும் வகையில் நாம் விவசாயத்தை பெருக்கவேண்டும். அறுவடை சமயத்தில் காலநிலை மாற்றத்தால் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். இதனைபோக்க இக்ரிசாட் பரிசோதனை நிபுணர் குழுவினர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நம் நாட்டில் 6 பருவ காலங்கள் 15 ரக காலநிலை மாற்றங்கள் ஆண்டுதோறும் நிகழ்கின்றன. இதற்கு ஏற்ப நாம் விவசாயத்தை பெருக்கவேண்டும். மேலும் நம் நாட்டில் 170 வறட்சி மாவட்டங்கள் உள்ளன. விவசாயத்தில் நவீன தொழில்நுட்ப புரட்சியை விரைவில் ஏற்படுத்த உள்ளோம்.

டிஜிட்டல் விவசாயத்தை பெருக்க பலமாற்றங்களை மத்திய அரசு செய்து வருகிறது. இந்த பட்ஜெட்டில்கூட சொட்டுநீர் பாசன விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.

பாமாயில் உற்பத்தியில் நாம்இன்னமும் அதிககவனம் செலுத்த வேண்டும். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்உள்ளன. இதுதொடர்பாக இவ்விரு மாநிலங்களுக்கும் அதிக ஊக்குவிப்பு இருக்கும். பயோபாமாயில் உற்பத்தியில் செலவு மிககுறைவு.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடி அரசு பயங்கரவாதத்தை ஒருபோத ...

மோடி அரசு பயங்கரவாதத்தை  ஒருபோதும் சகித்துக்கொள்ளாது – அமித்ஷா இந்தியாவில் அடுத்தாண்டுக்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும் என்று மத்திய ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இ ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்ததாலும் பிரச்சனை இல்லை – யோகி அதித்யநாத் ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்தாலும் பிரச்னையில்லை என்று உத்தரப் ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் ம ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் மோடி பயணம் : முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பிரச்சனைகளை பேச வேண்டும் – அண்ணாமலை காட்டம் 'தொகுதி மறுசீரமைப்புக் கூட்டம் என்று தி.மு.க., நாடகம் நடத்துகிறது. ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேர ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேரம் – அண்ணாமலை ''தி.மு.க.,வினர் ஊழல் மிக்கவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை அற்றவர்கள் ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – அமித்ஷா '' ஊழலை மறைக்கவே மொழி பிரச்னையை எழுப்புகின்றனர்,'' என ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...