அயோத்தி ராமர் கோவிலுக்கு ரூ.90 லட்சம்! கொடுக்கும் இஸ்லாமியர்

அயோத்தியில் ராமர் ஆலய கட்டுமான பணிக்கு பலரும் நன்கொடை அளித்து வரும் நிலையில் இஸ்லாமிய மக்களும் நன்கொடை வழங்கிவருகின்றனர். குறிப்பாக உத்திர பிரதேசத்தில் இருந்து நன்கொடைகள் குவிகின்றன. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோயிலுக்கு 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விற்று நன்கொடை அளிக்க இஸ்லாமிய குடும்பத்தினர் முன் வந்துள்ளனர். முசாபர்நகர் மாவட்டத்தில் கலபாரில்வசிக்கும் டாக்டர் முகமது சமர் கஜினி, ராமர் கோயில் கட்டுவதற்காக தனது தனிப்பட்ட சொத்தை விற்று அதன்மூலம் கிடைக்கும் சுமார் 90 லட்சத்தை மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத்திடம் ஒப்படைக்க விரும்புவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

ராமர் கோவில் கட்டவும் முஸ்லிம்களும் அயோத்தி மற்றும் காவியை நேசிக்கிறார்கள் என்ற செய்தியை முஸ்லிம் சமூகத்திற்கு சொல்வதற்காக இதனைசெய்வதாகவும் சமர் கூறியுள்ளார். கடந்த சிலநாட்களுக்கு முன்னர் காவி உடைஅணிந்து ரமலான் தொழுகையை நடத்தியவர்தான் சமர் கஜினி என்பது குறிப்பிடத் தக்கது. முகமது சமர் கஜினி பாஜக சிறுபான்மைபிரிவு தலைவராக இருந்தவர் என்பதும்,பாஜகவின் மீதான பற்று காரணமாகவும், யோகி ஆதித்யநாத்தின் செயல் பாடுகளாலும் கவரப்பட்ட அவர் ராமர் கோயிலுக்காக தங்கள் சொத்துக்களை தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

யோகி எந்தமதத்திற்கும் எதிரானவர் அல்ல என்றும், குற்றவாளிகள் மற்றும் மாஃபியாக்களுக்கு மட்டுமே எதிரானவர் என்றும் கூறியசமர், இது எங்களின் 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து, இதை நாங்கள் அயோத்தியின் பெயரில் நன்கொடையாக அளித்து யோகி ஜிக்கு வழங்குவோம். பிரார்த்தனையில் நாங்கள் அணிந்திருந்த காவிஉடையின் மூலம் நாங்கள் ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகிறோம். யோகி ஜியின் அணிந்திருக்கும் காவி நிறம் எந்தவொரு குறிப்பிட்ட மதத்திற்கோ அல்லது முஸ்லீம்களுக்கோ எதிரானதல்ல என்பதை முழுநாட்டிற்கும் தெரிவிக்க விரும்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...