18 லட்சம் தீபங்களின் தீப உற்சவத்தில் பங்கேற்க பிரதமர் மோடி, அயோத்தி சென்றடைந்தார். அங்கு ராமர் கோயிலில் பூஜைசெய்து வழிபாடு நடத்தினார். அவருடன் முதல்வர் யோகி ஆதித்ய நாத் உடன் சென்றார்.
அயோத்தியில் நடைபெற்ற தீப திருவிழாவில் கலந்துகொண்டு பேசியதாவது: பகவான் ராமர் யாரையும் விட்டு விடவில்லை. அவர் அனைவரையும் அழைத்துசெல்கிறார். பகவான் ராமரின் ஆளுமையை போற்றவும்,உலகளவில் நமது அடையாளத்தை நிலை நாட்டவும் கர்த்வய பாதையை நாங்கள் கொண்டுவந்துள்ளோம். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில் தீபாவளி வந்துள்ளது. ராமரின் சங்கல்பசக்தி இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டுசெல்லும். பிரயாக்ராஜ் நகரில்51 அடி உயரத்தில் ராமர் மற்றும் நிஷாத்ராஜ் சிலை நிறுவப்படும். இவ்வாறு அவர்கூறினார். முன்னதாக அவர் நகரில் இருக்கும் ராமர் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடுசெய்தார்.
உ.பி., மாநிலம் அயோத்தியில் நடைபெற்ற தீப திருவிழாவில் 18 லட்சம் தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |