ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்ததாலும் பிரச்சனை இல்லை – யோகி அதித்யநாத்

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்தாலும் பிரச்னையில்லை என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று வழிபாடு செய்தார்.

பின்னர் அயோத்தி கோயில் விழாவில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத்,

“எனக்கு முந்தைய மூன்று தலைமுறையினரும் ராமஜென்மபூமி இயக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் இருந்தபோதும் எனக்கு அயோத்திக்குச் செல்வதில் எந்த பிரச்னையும் இருந்ததில்லை.

ஆனால் ஒரு அரசின் அமைப்பு அதிகாரவர்க்கத்தால் சூழப்பட்டுள்ளது. அந்த அதிகாரவர்க்கத்தில் உள்ள ஒரு பிரிவினர், நான் ஒரு முதல்வராக அயோத்திக்குச் செல்வது சர்ச்சைக்கு வழிவகுக்கும் என்று கூறினர். அப்போது, தேவைப்பட்டால் சர்ச்சை வரட்டும் என்று நான் கூறினேன்.

நான் அயோத்திக்குச் சென்றால், ராமர் கோயில் பற்றிய பேச்சு இருக்கும் என்று மற்றொரு பிரிவினர் கூறினர்.

நான் அதிகாரத்திற்காக அயோத்திக்கு வந்தேனா என்று அவர்களிடம் கேள்வி கேட்டேன். அப்படி, ராமர் கோயிலுக்கு வருவதால் அதிகாரத்தை இழக்க வேண்டியிருந்தாலும் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை” என்று கூறியுள்ளார்.

மேலும் முன்பெல்லாம் தலைமை சரியாக இல்லாததால் அயோத்திக்கு அதிகம் வராத மக்கள், இன்று லட்சக்கணக்கில் வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நர ...

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்த ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்தால் தி.மு.க., ஆட்சி என்பதே இருக்காது: நயினார் நாகேந்திரன் ஆரூடம் “வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்தி விட்டால், இனி ...

நாட்டின் பாரம்பரியத்தை பிரதிப ...

நாட்டின்  பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சேனல் தூர்தர்ஷன் – மத்திய இணை அமைச்சர் ''நாட்டின் பொருளாதாரத்தில், படைப்பு பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது,'' என, ...

போதை பொருள் விற்பனையில் தமிழகம ...

போதை பொருள் விற்பனையில்  தமிழகம் முதலிடம் – எ ச் ராஜா தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருள் விற்பனையாகிறது. கஞ்சா மூடைகள் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன்ட்ரோல் – நயினார் நாகேந்திரன் ''2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தமிழகத்தில் இருந்து அவுட் ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமு ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமுக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுத்தமான குடிநீரைக் கூட வழங்க ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...