இன்னும் 2 வருடங்களில் 50சதவீத விபத்து குறைஞ்சிடும்.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி!

பீகார் மாநிலத்தில் சுல்தாங்கஞ்ச் பகுதியில் கடந்த ஏப்ரல்மாதம் 20ம் தேதி இடியுடன் கூடிய கனமழைபெய்தது. இதில் கங்கைநதியின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. புதிதாக கட்டப்பட்டு வரும்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாலம் இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்த அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்தியசாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி, பீகார் மாநிலம் சுல்தாங்கஞ்ச் என்ற இடத்தில் பாலம் ஒன்று இடிந்துவிழுந்தது. இதற்கான காரணத்தை, எனது செயலாளரிடம் கேட்டேன். பலமான காற்று வீசியதால் பாலம் இடிந்து விழுந்ததாக சொன்னார். இதுபோன்ற காரணத்தை ஒருஐஏஎஸ் அதிகாரி எப்படி நம்புகிறார் என்றும், முறையான காரணத்தை விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இரண்டு ஆண்டுகளில் விபத்துகளை 50 சதவீதம்குறைக்கவும், அடிக்கடி விபத்துகள் நிகழும் சாலைகளில் உள்ள கரும்புள்ளிகளை கண்டறியவும் தனது அமைச்சக அதிகாரிகளை கேட்டுகொண்டுள்ளார்.

சாலைபாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள், பொதுமக்களுடன் இணைந்து கூட்டாக விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று கட்காரி வலியுறுத்தியுள்ளார். இது மிகவும் தீவிரமான பிரச்சனை என்றும் சாலைவிபத்துகளை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

சாலை பாதுகாப்பை மேம்படுத்த சேவ்லைஃப் அறக்கட்டளை முன்வைத்த பல்வேறு உத்திகள் மற்றும் தீர்வுகளை விரைவில்பரிசீலித்து செயல்படுத்த மூத்த அதிகாரிகளுக்கு கட்கரி உத்தரவிட்டுள்ளார்.

நடவடிக்கை எடுக்கும் போது, ​​உடனடி நடவடிக்கைகள், இடைக்கால நடவடிக்கைகள் மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் என 3 விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள கட்கரி, அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் திட்டஇயக்குநர்கள் விபத்துக்கள் அற்ற பகுதியை உருவாக்குவோம் என விபத்துக்கான உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு இதற்கு முன்னதாக சாலைவிபத்துக்களை குறைக்கும் விதமாக குழந்தைகளுக்கு ஹெல்மேட் கட்டாயம், வாகனத்தின் அனைத்து வேரியன்ட்கள் மற்றும் பிரிவுகளிலும் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகள் கட்டாயம் போன்ற விதிமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் விபத்துகளை 50 சதவீதம் குறைக்கும்நோக்கில், மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில், செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் திட்டமான “iRASTE” திட்டத்தை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சோதனை முயற்சியாக தொடங்கிவைத்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...