காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளது

காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளதால், அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: டிஜிபி., அறிவிப்பை வரவேற்கிறேன். சொல்வதோடு நிறுத்தாமல் குற்றவாளிகளை கைதுசெய்ய வேண்டும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பா.ஜ., தொண்டர்கள் அமைதிகாக்க வேண்டும். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப் படுவார்கள் என நம்புகிறோம்.

தமிழக போலீஸ் கைகள் கட்டப் பட்டுள்ளன. இதனால், அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. இதனை பலமுறை கூறி வருகிறோம். அதுன் உச்சம்தான் தற்போது தொட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பா.ஜ., தொண்டர்களுக்கு உதவுவோம். தாக்குதல் நடத்துவதால், பாஜ.,வின் வளர்ச்சியை தடுக்கமுடியாது. இதே சூழ்நிலை தொடர்ந்தால், தொண்டர்களின் கோபத்திற்கு மாநில அரசு ஆளாகும் என எச்சரித்து கொள்கிறேன்.
மாநில அரசு இன்னும் ஆக்ரோஷமாக நடவடிக்கை எடுக்கவேண்டும். குண்டுவீச்சு சம்பவத்தில் தொடர்புள்ளவர்களை விரைவில் கைதுசெய்ய வேண்டும். பெட்ரோல் குண்டுவீச்சு குறித்து முன்கூட்டியே எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆரம்பத்தில் போலீசார் சுணக்கமாக செயல்பட்டாலும், தற்போது வரைவாக செயல்படுகின்றனர்.

பா.ஜ.வினரை உளவுத் துறையினர் உன்னிப்பாக கவனிக்கின்றனர். அண்ணாமலை என்ன செய்கிறார். என்ன சாப்பிடுகிறார் என கண்காணிப்பவர்கள், கலவரம் செய்பவர் களை கண்காணிப்பதில் என்ன பிரச்னை. பா.ஜ., தொண்டர்களை கைதுசெய்யும் அளவிற்கு என்ன கோபம். மாநில அரசிற்கு எச்சரிக்கும் விதமாக நாளை கோவையில் போராட்டம் நடக்க உள்ளது. புகார்மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படுகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...