காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளது

காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளதால், அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: டிஜிபி., அறிவிப்பை வரவேற்கிறேன். சொல்வதோடு நிறுத்தாமல் குற்றவாளிகளை கைதுசெய்ய வேண்டும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பா.ஜ., தொண்டர்கள் அமைதிகாக்க வேண்டும். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப் படுவார்கள் என நம்புகிறோம்.

தமிழக போலீஸ் கைகள் கட்டப் பட்டுள்ளன. இதனால், அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. இதனை பலமுறை கூறி வருகிறோம். அதுன் உச்சம்தான் தற்போது தொட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பா.ஜ., தொண்டர்களுக்கு உதவுவோம். தாக்குதல் நடத்துவதால், பாஜ.,வின் வளர்ச்சியை தடுக்கமுடியாது. இதே சூழ்நிலை தொடர்ந்தால், தொண்டர்களின் கோபத்திற்கு மாநில அரசு ஆளாகும் என எச்சரித்து கொள்கிறேன்.
மாநில அரசு இன்னும் ஆக்ரோஷமாக நடவடிக்கை எடுக்கவேண்டும். குண்டுவீச்சு சம்பவத்தில் தொடர்புள்ளவர்களை விரைவில் கைதுசெய்ய வேண்டும். பெட்ரோல் குண்டுவீச்சு குறித்து முன்கூட்டியே எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆரம்பத்தில் போலீசார் சுணக்கமாக செயல்பட்டாலும், தற்போது வரைவாக செயல்படுகின்றனர்.

பா.ஜ.வினரை உளவுத் துறையினர் உன்னிப்பாக கவனிக்கின்றனர். அண்ணாமலை என்ன செய்கிறார். என்ன சாப்பிடுகிறார் என கண்காணிப்பவர்கள், கலவரம் செய்பவர் களை கண்காணிப்பதில் என்ன பிரச்னை. பா.ஜ., தொண்டர்களை கைதுசெய்யும் அளவிற்கு என்ன கோபம். மாநில அரசிற்கு எச்சரிக்கும் விதமாக நாளை கோவையில் போராட்டம் நடக்க உள்ளது. புகார்மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படுகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...