பாஜகவால் தேசிய கொடிக்கு ஆபத்தல்ல; அதை இறக்க நினைப்பவர் களுக்குதான் ஆபத்து

பாஜகவால் இந்திய தேசிய கொடிக்கு ஆபத்தல்ல; அந்தக் கொடியை இறக்க நினைப்பவர் களுக்குதான் ஆபத்து” என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அல்டாப் தாக்குர் தெரிவித்தார். இந்திய அரசியல்சாசனத்தை பாஜக அழிக்கிறது என்றும், நமது தேசியக் கொடியைகூட பாஜக மாற்றிவிடும் எனவும் மெகபூபா முப்தி பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அல்டாப் தாக்குர் இவ்வாறு கூறியுள்ளார்.

காஷ்மீரில் நமது மூவர்ணக்கொடியை ஏற்றவே கூடாது என கங்கனம் கட்டிக் கொண்டிருந்த மெகபூபா முப்திக்கு திடீரென தேசியக் கொடி மீது எப்படி அக்கறைவந்தது? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பாஜகவை கடுமையாக சாடிய மெகபூபா ஸ்ரீநகரில் நேற்றுநடைபெற்ற மக்கள் ஜனநாயகக் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவர் பேசியதாவது: இந்திய மக்களின்தயவால் மத்தியில் ஆட்சியை பிடித்த பாஜக, இன்று அதேமக்களை தங்கள் காலில் போட்டு நசுக்கி வருகிறது. மத்திய அரசு என்ன செய்தாலும் மக்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். அடக்குமுறையை தங்கள் ஆயுதமாக பாஜக கையாண்டுவருகிறது. சர்வாதிகாரத்தால் மக்கள் வெகுநாட்களுக்கு அடக்கிவைக்க முடியாது. அந்த வகையில், பாஜகவின் சர்வாதிகாரமும் விரைவில் முடிவுக்கு வரும்.

காஷ்மீர் அரசியல்சாசனத்தை முற்றிலுமாக அழித்தது போல, இந்திய அரசியல் சாசனத்தை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டுவருகிறது. இன்னும் சிறிதுவிட்டால் கூட, நம் முன்னோர்கள் ரத்தம் சிந்தி ஏற்றிய நம் தேசியக்கொடியை தூக்கியெறிந்துவிட்டு, அக்கட்சியின் கொடியான காவிக்கொடியை பறக்கவிட்டு விடும் என மெகபூபா முப்தி பேசினார்.

இந்நிலையில், மெகபூபாவின் இந்தபேச்சு குறித்து ஜம்மு – காஷ்மீர் பாஜக செய்தித்தொடர்பாளர் அல்டாப் தாக்குரிடம் நிருபர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இந்திய தேசியக் கொடியை வெறுத்த, காஷ்மீரில் அந்தக்கொடியை பறக்கவிடக் கூடாது என கங்கனம் கட்டி செயல்பட்ட மெகபூபா முப்தியே இன்று நமது கொடியை பற்றி பேச செய்ததே பாஜகவின் வெற்றியாக கருதுகிறேன். இன்று இந்தியாவில் எட்டுத்திக்கும் மூவர்ணக்கொடி பறப்பதை மெகபூபா முப்தியால் பார்க்க முடியவில்லை. அந்த விரக்தியில் அவர் என்னென்னவோ பேசி வருகிறார்” தேசியக் கொடிக்கு ஆபத்து அல்ல.. இந்திய தேசியக்கொடியை பாஜக மாற்றிவிடும் என மெகபூபா முப்தி கூறியிருக்கிறார். அது அவரதுதனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். ஆனால் அது நடக்காது. பாஜக என்றுமே இந்தியாவை முதன்மையாக கருதும் கட்சி. பிறகுதான் கட்சிக்கே நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம். தேசியக்கொடியை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் கட்சி பாஜக. எனவே, பாஜகவால் தேசியக் கொடிக்கு ஆபத்துவராது. அந்தக் கொடியை இறக்க நினைப்பவர்களுக்குதான் பாஜக ஆபத்தை ஏற்படுத்தும்” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...