கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

 கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

இந்தச் செடியின் இலைகளை உண்டால், இரத்தத்தில் உள்ள இரும்பு தாதுக்களைப்  பலப்படுத்தி மனிதனுக்கு நோய் இல்லாமல் செய்து பாதுகாக்கின்றது.

 

மனித உடம்பு, பருத்து வளரச் சுண்ணாம்பு சத்தும், இரும்புச்சத்தும் தேவை. இந்த உடல் வளர்ச்சிக்கு வேண்டிய இரும்பு சத்து முழுவதும் இந்தச் செடியின் இலையைப் பச்சையாக உண்பவர்களுகுக் கிடைக்கும். இதை மருந்தாக செய்து உண்பவர்களுக்குக் கிடைக்கும். இதை மருந்தாக செய்து பயன்படுத்துபவர்களுக்கும் உணவாகச் சமைத்து உண்பவர்களுக்கும் பேரு நன்மையை உண்டாக்குகிறது. உடலை நோயின்றி காக்கும். இரும்புச் சத்தை உடலுக்கு கொடுக்க வல்லது. இதை உடலை வளர்க்கும் சஞ்சீவியாகக் கருதப்படுகிறது.

 

இந்த  இலையைத் தினமும் காலையில் கிராமமக்கள் பல் தேய்க்க உபயோகிக்கிறார்கள். இந்த இலையின் நான்கோ அல்லது ஐந்தோ பறித்து நன்றாகக் கசக்கிப் பல் துலக்கினால் பற்கள் வெண்மையாக இருக்கும். ஈறுகள் இந்த இலையின் இரும்புச்சதைப்பெற்று கெட்டியாகவும், பலம் பொருந்தியதாகவும் ஆகும். இந்த இலையைக் கொண்டு வந்து அரைத்து ஒரு மணி நேரம் வைத்து தலை மூழ்கினால் கண் குளிர்ச்சியாக இருக்கும். தலைமுடி உதிராமலும், கருமையாகவும் இருக்கின்றது. பொடுகுகளை அகற்றுகிறது.

 

இந்த இலையுடன் கொஞ்சம் சுண்ணாம்பும், புகையிலையும் சேர்த்து அரைத்துத் தலையில் தேய்த்து வைத்து சிறிதுநேரம், பொறுத்திருந்து நீரில் தலை மூழ்கினால், தலைமுடியின் உள்ளே மறைந்து வாழும் ஈறு, பேன் போன்றவை மயங்கியோ, அல்லது இறந்தோ நீரில் மிதக்கக் காணலாம்.

 

இந்தச் செடியை இலையுடன் கொண்டு வந்து நன்றாக அரைத்து வில்லைகளாகத் தட்டி, நிழலில் காயவைக்க வேண்டும். அளவு தேங்காய் எண்ணெயிலோ, நல்லெண்ணயிலோ போட்டுக் காய்ச்சி பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதைத் தினமும் தலையில் தடவி வந்தாலும், தலையில் தேய்த்து தலை மூழ்கினாலும் தலைமுடி கருமையுடனும், உதிராமலும் இருக்கும். நரையைப் போக்கும்.

 

பெண்களுக்கு இந்தச் செடியின் இலைகள் மிகவும் இன்றியமையாததாகிறது. பெண்களின் மாதவிடாய் கோளாறுகளைச் சரி செய்யும். இதை உண்டால் பெண்களின் வெள்ளைப்படுதல் நிறுத்தப்படும். இதைக் கிதமாகவும், லேகியமாகவும் செய்து உபயோகிக்கலாம்.

இந்த இலையை உண்பதால் உடம்பில் உள்ள சிவப்பு அணுக்களை குறையாமல் பாதுகாத்து வைக்கின்றது. இதனால் இந்த இலையை உண்பதால் இதில் உள்ள இரும்புச்சத்து உடம்பைப் பாதுகாத்து, உடல் உறுப்புக்களை, பாதுகாத்து, தலைமுடியைப் பாதுகாத்து நீண்டநாள் வாழ வைக்கின்றது.

 

வெள்ளைப்பூ கரிசலாங்கண்ணி இலையை அரைத்து அடை தட்டிக் காயவைத்து தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் ஊறவைத்துத் தேய்த்தால் முடி கருத்துச் செழித்து வளரும்.

கரிசாலை, பூக்காத கொட்டைக் கரந்தை ஆகியவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து நாள்தோறும் காலை, மாலை அரைத்தேக்கரண்டி தேனில் குழைத்து சாப்பிட்டுவர இளவயதில் தோன்றும் நரை மாறும்.

சுத்தமான கைப்பிடியளவு கரிசாலை இலையுடன் 9 மிளகையும் சேர்த்து நெகிழ அரைத்து இரண்டு உருண்டைகளாக காலை மாலை உண்டு 7 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். கண்களில் இருக்கும் மஞ்சள் நிறமும் மாறிவிடும்.

கரிசலாங்கண்ணி, குப்பைமேனி, சிறுசெருப்படை இவற்றை வகைக்கு சமஅளவில் எடுத்து வெய்யிலில் உலர்த்தி இடித்துச் சலித்து சீசாவில் பத்திரப்படுத்தி காலை, மாலை அரை தேக்கரண்டியளவு எடுத்து அதற்குச் சமன் சர்க்கரை சேர்த்து கொடுத்து வந்தால் சோகை நோய் குணமாகும். இவ்விதமாய் இதனைத் தொடர்ந்து 21 நாட்கள் கொடுக்க வேண்டும்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...