திராட்சையின் மருத்துவக் குணம்

 திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ஊட்டமளிப்பது. புத்துணர்ச்சியூட்டதக்க குளிர்ச்சியான கனி திராட்சை.

நன்றாக நீர்ப்போக்கைத் தூண்டும். இது தாகத்தையும் தணித்து, வயிறு எரிச்சலை மட்டுப்படுத்தும். காய்ச்சல், ஆஷ்துமா, நெஞ்சக நோய், தொழுநோய், ஒழுங்கற்ற மாதவிலக்கு, குரல் கோளாறு, வாந்தி, உடல் பருமன், வீக்கங்கள், நெடு நாளைய காமாலை என பல்வேறு உடல் கோளாறுகளையும் குணமாக்கும். குடலில் அமிலத் தன்மை ஏற்படுவதைத் தவிர்த்துவிடும்.

இளமையைத் தக்கவைத்து முதுமையை அண்டவிடாமல் திராட்சை பாதுகாக்கிறது. மிகுந்த சத்துள்ள உணவு திராட்சை. வயிறு எரிச்சலைக் குறைத்து செரிமானத்தைச் சீராக்கி, வாயுப் பொருமலைப் போக்கவும் செய்கிறது.

சிறுநீரகக் கற்கள், சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற சிறுநீரகத் தொல்லைகளை குணமாக்கும் அருமருந்து திராட்சை கனிகள். ஒழுங்கற்ற, வலியுடன் கூடிய மாதவிலக்கு, அதிக ரத்தப்போக்கு, மூட்டுவலி இவற்றைச் சரிசெய்ய வல்லது திராட்சை.

திராட்சையில் சர்க்கரைத் தன்மை கூடுகிறது. திராட்சையிலுள்ள குளுகோஸ் வகையிலானது. மற்ற பழங்களைக் காட்டிலும் திராட்சையிலுள்ள குளுகோஸ் அளவில் மிக அதிகம். இந்தப் பழத்திலுள்ள குளுகோஸ் எளிதில் உடலில் சத்தாக உறிஞ்சப்பட்டுவிடும்.

மிகக்குறைந்த அளவே இரும்புச்சத்து இருந்தாலும் எளிதாக உடலில் சேர்வதால், ரத்தச் சோகைக்கு திராட்சை பழங்களும் உதவி செய்யும். 3௦௦ மில்லி லிட்டர் திராட்சைச்சாறு பருகினாலே போதும், ரத்தச்சோகை நோயை எதிர்த்து உடலுக்கு வலுவேற்றும்.

திராட்சைப் பழத்தில் மாலிக், சிட்ரிக், டார்டாரிக் அமிலங்கள் உள்ளன. இவை ரத்தத்திலுள்ள நச்சை சுத்திகரித்து, மலம் கழிவதற்கான பெருங்குடல் தூண்டுதலுக்கும் உதவுகின்றன. சிறுநீரகங்களுக்கும் மருத்துவரீதியாகப் பக்கப்பலமாக உள்ளது.

திராட்சையை கொத்தாகப் பறித்து, பழங்களைக் கழுவிவிட்டு வாயிலிட்டு தின்னலாம். ஆனாலும், திராட்சையைச் சாறாக அருந்துவதே மிகுந்த பலன் தரக் கூடியது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...