விவசாயிகளுக்கு 20,000 கோடி அள்ளிகொடுக்கும் மோடி

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் பிஎம் கிசான் திட்டம் குறித்து நேற்று (ஜூன் 15) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 17வது தவணையாக சுமார் 20,000 கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்க இருப்பதாகத் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 18ஆம் தேதியன்று வாரணாசியில் 17ஆவது தவணையை விடுவிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுமட்டுமல்லாமல், சுமார் 30,000க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு கிருஷி சகி (வேளாண் தோழிகள்) என்ற சான்றிதழ்களை பிரதமர் நரேந்திர மோடி வழங்க இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் உத்தரப் பிரதேச மாநில அரசுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்ய இருக்கிறது. வளர்ச்சியடைந்த இந்தியா என்ற குறிக்கோளை அடைய விவசாயம் மிக முக்கியமான அடித்தளம் என்று அவர் கூறினார். இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமாக விவசாயம் உள்ளது என்று சிவராஜ் சிங் சௌகான் மேலும் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறார். பிஎம் கிசான் திட்டத்தின் 17ஆவது தவணையாக ரூ. 20,000 கோடிக்கும் அதிகமான தொகையை வாரணாசியில் இருந்து பிரதமர் விடுவிக்கவிருக்கிறார். இதன்மூலம் 9.26 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள்” என்று கூறியுள்ளார்.

பிஎம் கிசான் திட்டம் 2019 பிப்ரவரி 24ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட திட்டமாகும். இதில் பயனாளிகளை பதிவு செய்வதிலும், சரிபார்ப்பதிலும் முழுமையான வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசால் இதுவரை நாடு முழுவதும் 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ. 3.04 லட்சம் கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் சுமார் 2.5 கோடி விவசாயிகள் இந்த நிகழ்ச்சியில் நேரலையில் இணைந்து பங்கேற்பார்கள் என்று அவர் கூறினார். 732 வேளாண் அறிவியல் மையங்கள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்டவையும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் என அவர் தெரிவித்தார்.

3 கோடி லட்சாதிபதி பெண்களை உருவாக்க பிரதமர் தீர்மானித்துள்ளதாகவும், இதில் சுமார் ஒரு கோடி லட்சாதிபதி பெண்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் 2 கோடி பேர் லட்சாதிபதிகளாக உருவாக்கப்பட உள்ளதாகவும் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...