கிராம புறங்களில் பண பரிமாற்றத்தின் சேவையை அதிகரிக்க ஏற்பாடு

இந்திய அஞ்சலக வங்கி மற்றும் ரியா மணி ட்ரான்ஸ்பர் நிறுவனம் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான, திறன் வாய்ந்த மற்றும் வசதியான வகையில் சர்வதேச பணப் பரிமாற்ற சேவைகளை  வழங்க முடிவு செய்துள்ளன. இதற்காக மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்த ஒத்துழைப்பால் இந்தியா முழுவதும் தொலைதூர பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வசதியான மற்றம் குறைந்த செலவிலான நிதி சேவைகள் கிடைக்கும்.

நாட்டின் மக்கள் தொகையில் அறுபத்தைந்து சதவீதம் பேர் குறைந்த நிதி உள்கட்டமைப்பு வசதிகளுடன் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். இந்தக் குடும்பத்தினர் வெளிநாடுகளிலிருந்து தங்களுக்கு அனுப்பப்படும் பணத்தைப் பெற நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதுடன் சில சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருந்தது.  இதைத் தவிர்க்க இந்திய அஞ்சலக வங்கியும், ரியா மணி ட்ரான்ஸ்பர் நிறுவனமும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.

இந்தக் கூட்டுச் செயல்பாட்டின் மூலம் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணத்தை நாடு முழுவதும் உள்ள  25,000-க்கும் மேற்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் உடனடியாகப் பெற முடியும்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த இந்திய அஞ்சலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான ஆர் விஸ்வேஸ்வரன், கிராமப்புற இந்தியா நமது தேசத்தின் இதயமாக உள்ளது என்றார். கிராமப்புறங்களைச் சேர்ந்த பலர்  வெளிநாடுகளில் பணி புரியும் தங்களது குடும்பத்தினர் அனுப்பும் பணத்தைப் பெற்று பயன்படுத்துவதாகத் தெரிவித்தார். அவர்களுக்குப் பயன்  அளிக்கும் வகையில், இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணத்தை  கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு எளிமையாகப் பெற்றுத்தர இந்த முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்று  அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...