கிராம புறங்களில் பண பரிமாற்றத்தின் சேவையை அதிகரிக்க ஏற்பாடு

இந்திய அஞ்சலக வங்கி மற்றும் ரியா மணி ட்ரான்ஸ்பர் நிறுவனம் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான, திறன் வாய்ந்த மற்றும் வசதியான வகையில் சர்வதேச பணப் பரிமாற்ற சேவைகளை  வழங்க முடிவு செய்துள்ளன. இதற்காக மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்த ஒத்துழைப்பால் இந்தியா முழுவதும் தொலைதூர பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வசதியான மற்றம் குறைந்த செலவிலான நிதி சேவைகள் கிடைக்கும்.

நாட்டின் மக்கள் தொகையில் அறுபத்தைந்து சதவீதம் பேர் குறைந்த நிதி உள்கட்டமைப்பு வசதிகளுடன் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். இந்தக் குடும்பத்தினர் வெளிநாடுகளிலிருந்து தங்களுக்கு அனுப்பப்படும் பணத்தைப் பெற நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதுடன் சில சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருந்தது.  இதைத் தவிர்க்க இந்திய அஞ்சலக வங்கியும், ரியா மணி ட்ரான்ஸ்பர் நிறுவனமும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.

இந்தக் கூட்டுச் செயல்பாட்டின் மூலம் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணத்தை நாடு முழுவதும் உள்ள  25,000-க்கும் மேற்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் உடனடியாகப் பெற முடியும்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த இந்திய அஞ்சலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான ஆர் விஸ்வேஸ்வரன், கிராமப்புற இந்தியா நமது தேசத்தின் இதயமாக உள்ளது என்றார். கிராமப்புறங்களைச் சேர்ந்த பலர்  வெளிநாடுகளில் பணி புரியும் தங்களது குடும்பத்தினர் அனுப்பும் பணத்தைப் பெற்று பயன்படுத்துவதாகத் தெரிவித்தார். அவர்களுக்குப் பயன்  அளிக்கும் வகையில், இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணத்தை  கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு எளிமையாகப் பெற்றுத்தர இந்த முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்று  அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...