கிராம புறங்களில் பண பரிமாற்றத்தின் சேவையை அதிகரிக்க ஏற்பாடு

இந்திய அஞ்சலக வங்கி மற்றும் ரியா மணி ட்ரான்ஸ்பர் நிறுவனம் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான, திறன் வாய்ந்த மற்றும் வசதியான வகையில் சர்வதேச பணப் பரிமாற்ற சேவைகளை  வழங்க முடிவு செய்துள்ளன. இதற்காக மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்த ஒத்துழைப்பால் இந்தியா முழுவதும் தொலைதூர பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வசதியான மற்றம் குறைந்த செலவிலான நிதி சேவைகள் கிடைக்கும்.

நாட்டின் மக்கள் தொகையில் அறுபத்தைந்து சதவீதம் பேர் குறைந்த நிதி உள்கட்டமைப்பு வசதிகளுடன் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். இந்தக் குடும்பத்தினர் வெளிநாடுகளிலிருந்து தங்களுக்கு அனுப்பப்படும் பணத்தைப் பெற நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதுடன் சில சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருந்தது.  இதைத் தவிர்க்க இந்திய அஞ்சலக வங்கியும், ரியா மணி ட்ரான்ஸ்பர் நிறுவனமும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.

இந்தக் கூட்டுச் செயல்பாட்டின் மூலம் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணத்தை நாடு முழுவதும் உள்ள  25,000-க்கும் மேற்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் உடனடியாகப் பெற முடியும்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த இந்திய அஞ்சலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான ஆர் விஸ்வேஸ்வரன், கிராமப்புற இந்தியா நமது தேசத்தின் இதயமாக உள்ளது என்றார். கிராமப்புறங்களைச் சேர்ந்த பலர்  வெளிநாடுகளில் பணி புரியும் தங்களது குடும்பத்தினர் அனுப்பும் பணத்தைப் பெற்று பயன்படுத்துவதாகத் தெரிவித்தார். அவர்களுக்குப் பயன்  அளிக்கும் வகையில், இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணத்தை  கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு எளிமையாகப் பெற்றுத்தர இந்த முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்று  அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...