இந்திய ரயில்வேயில் வரலாற்று மாற்றம் – பிரதமர் மோடி பெருமிதம்

இந்திய ரயில்வே ஒரு வரலாற்று மாற்றத்தைக் கண்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாடு முழுவதும் ரயில் இணைப்பை மேம்படுத்தும் வகையில், பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு இன்று (ஜன.,06) பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அவர், தெலுங்கானாவில் சர்லபள்ளி புதிய டெர்மினல் ஸ்டேஷனை திறந்து வைத்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா முழுவதும் ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரயில் பயன்பாட்டில் உள்ளது. நாட்டில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. நேற்று டில்லி மெட்ரோவின் முக்கிய திட்டங்களை துவக்கி வைத்தேன். இன்று கோடிக்கணக்கான மதிப்பிலான திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், பயணிகளுக்கு நவீன வசதிகள், நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் ரயில் சேவை ஆகியவற்றை நாங்கள் செய்து வருகிறோம். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் ரயில் சேவைகள் அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டு வரை, நாட்டில் 35 சதவீத ரயில் பாதைகள் மட்டுமே மின்மயமாக்கப்பட்டன. இன்று, இந்தியா தனது ரயில் பாதைகளில் 100 சதவீத மின்மயமாக்கலை நெருங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், 30,000 கிலோமீட்டருக்கும் அதிகமான புதிய ரயில் பாதைகளும், சாலை இணைப்பை மேம்படுத்த ஆயிரக்கணக்கான மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளன.

இந்திய ரயில்வே ஒரு வரலாற்று மாற்றத்தைக் கண்டுள்ளது. ரயில்வே உள்கட்டமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்படுகிறது. இது நாட்டின் நன்மதிப்பை மேம்படுத்த வழிவகுத்தது. மக்கள் குறைந்த நேரத்தில் நீண்ட தூரம் பயணிக்க விரும்புகிறார்கள், எனவே நாடு முழுவதும் அதிவேக ரயில்களுக்கு பெரும் தேவை இருப்பதைக் கண்டோம். இன்று 50க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 136 வந்தே பாரத் ரயில் சேவைகள் மக்களின் பயண நேரத்தை குறைத்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...