இந்திய ரயில்வேயில் வரலாற்று மாற்றம் – பிரதமர் மோடி பெருமிதம்

இந்திய ரயில்வே ஒரு வரலாற்று மாற்றத்தைக் கண்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாடு முழுவதும் ரயில் இணைப்பை மேம்படுத்தும் வகையில், பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு இன்று (ஜன.,06) பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அவர், தெலுங்கானாவில் சர்லபள்ளி புதிய டெர்மினல் ஸ்டேஷனை திறந்து வைத்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா முழுவதும் ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரயில் பயன்பாட்டில் உள்ளது. நாட்டில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. நேற்று டில்லி மெட்ரோவின் முக்கிய திட்டங்களை துவக்கி வைத்தேன். இன்று கோடிக்கணக்கான மதிப்பிலான திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், பயணிகளுக்கு நவீன வசதிகள், நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் ரயில் சேவை ஆகியவற்றை நாங்கள் செய்து வருகிறோம். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் ரயில் சேவைகள் அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டு வரை, நாட்டில் 35 சதவீத ரயில் பாதைகள் மட்டுமே மின்மயமாக்கப்பட்டன. இன்று, இந்தியா தனது ரயில் பாதைகளில் 100 சதவீத மின்மயமாக்கலை நெருங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், 30,000 கிலோமீட்டருக்கும் அதிகமான புதிய ரயில் பாதைகளும், சாலை இணைப்பை மேம்படுத்த ஆயிரக்கணக்கான மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளன.

இந்திய ரயில்வே ஒரு வரலாற்று மாற்றத்தைக் கண்டுள்ளது. ரயில்வே உள்கட்டமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்படுகிறது. இது நாட்டின் நன்மதிப்பை மேம்படுத்த வழிவகுத்தது. மக்கள் குறைந்த நேரத்தில் நீண்ட தூரம் பயணிக்க விரும்புகிறார்கள், எனவே நாடு முழுவதும் அதிவேக ரயில்களுக்கு பெரும் தேவை இருப்பதைக் கண்டோம். இன்று 50க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 136 வந்தே பாரத் ரயில் சேவைகள் மக்களின் பயண நேரத்தை குறைத்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப் ...

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என சைப்ரஸ் ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்ச ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர் முதல்வர் ஸ்டாலின் கற்பனை திறனை பலப்படுத்தி கொள்வதற்காக, தேவையில்லாத ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் கடந்த 2017ம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கடல்நீர் ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்; சைப்ரஸில் தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட பொருளாதார மற்றும் ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – பிரதமர் மோடி இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரத ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரதமர்.. வரலாற்றில் இதுவே முதல் முறை மோடியை திரும்பி பார்த்த உலக நாடுகள் பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா உள்ளிட்ட ...

மருத்துவ செய்திகள்

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...