இந்திய ரயில்வேயில் வரலாற்று மாற்றம் – பிரதமர் மோடி பெருமிதம்

இந்திய ரயில்வே ஒரு வரலாற்று மாற்றத்தைக் கண்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாடு முழுவதும் ரயில் இணைப்பை மேம்படுத்தும் வகையில், பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு இன்று (ஜன.,06) பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அவர், தெலுங்கானாவில் சர்லபள்ளி புதிய டெர்மினல் ஸ்டேஷனை திறந்து வைத்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா முழுவதும் ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரயில் பயன்பாட்டில் உள்ளது. நாட்டில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. நேற்று டில்லி மெட்ரோவின் முக்கிய திட்டங்களை துவக்கி வைத்தேன். இன்று கோடிக்கணக்கான மதிப்பிலான திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், பயணிகளுக்கு நவீன வசதிகள், நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் ரயில் சேவை ஆகியவற்றை நாங்கள் செய்து வருகிறோம். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் ரயில் சேவைகள் அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டு வரை, நாட்டில் 35 சதவீத ரயில் பாதைகள் மட்டுமே மின்மயமாக்கப்பட்டன. இன்று, இந்தியா தனது ரயில் பாதைகளில் 100 சதவீத மின்மயமாக்கலை நெருங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், 30,000 கிலோமீட்டருக்கும் அதிகமான புதிய ரயில் பாதைகளும், சாலை இணைப்பை மேம்படுத்த ஆயிரக்கணக்கான மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளன.

இந்திய ரயில்வே ஒரு வரலாற்று மாற்றத்தைக் கண்டுள்ளது. ரயில்வே உள்கட்டமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்படுகிறது. இது நாட்டின் நன்மதிப்பை மேம்படுத்த வழிவகுத்தது. மக்கள் குறைந்த நேரத்தில் நீண்ட தூரம் பயணிக்க விரும்புகிறார்கள், எனவே நாடு முழுவதும் அதிவேக ரயில்களுக்கு பெரும் தேவை இருப்பதைக் கண்டோம். இன்று 50க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 136 வந்தே பாரத் ரயில் சேவைகள் மக்களின் பயண நேரத்தை குறைத்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...