4-ஜி செல்பேசி சேவையை பிஎஸ்என்எல் தொடங்கியது

4-ஜி செயல்பாட்டுத் திட்டத்தின் கீழ் திருள்ளூர் மாவட்டத்தில் 4-ஜி செல்பேசி சேவையை பிஎஸ்என்எல் தொடங்கியுள்ளது.  நொச்சிலி, கொளத்தூர், பள்ளிப்பட்டு, திருவெள்ளைவாயல், பொன்னேரி, அத்திப்பேடு, அண்ணாமலைச்சேரி, திருப்பாளைவனம், இளவெம்பேடு, காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம், வீராணத்தூர், ஸ்ரீகாளிகாபுரம், வங்கனூர், ஆர்கே பேட்டை, செம்பேடு, பூனிமாங்காடு, கோரமங்கலம், ஆகிய பகுதிகளில் இந்த சேவை 2024 ஜூலை 5 அன்று தொடங்கப்பட்டது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சென்னை தொலைபேசி, தலைமைப் பொது மேலாளர் பாப்பா சுதாகர்ராவ், இந்த சேவைகளைத் தொடங்கிவைத்தார்.  இந்த நிகழ்ச்சியில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சென்னை அதிகாரிகளும், தொழில்துறை தலைவர்களும் கலந்து கொண்டனர்.

தற்சார்பு இந்தியா முன்முயற்சியான மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய 4ஜி சேவை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மத்திய அரசால் நிதியளிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கான செலவு ரூ.16.25 கோடியாகும்.

டிஜிட்டல் பயன்பாட்டில் உள்ள பாகுபாட்டை நீக்கி ஊரகப் பகுதிகளிலும் தொலைதூரப் பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு அதிகாரம் அளிப்பது இந்த நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க முயற்சியை இது காட்டுகிறது. இந்தப் பகுதிகளில் 4ஜி சேவைகளின் அறிமுகம், கல்வி, வணிகம், குடிமக்களுக்கு அதிகாரம் ஆகியவற்றில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை தொலைபேசியின் IX.2 திட்டத்திற்கு 2,114 4-ஜி கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த 4ஜி சேவைகள்  விரைவில் சென்னை, திருவள்ளூர்,  காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களையும்  உள்ளடக்கியதாக இருக்கும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...