4-ஜி செல்பேசி சேவையை பிஎஸ்என்எல் தொடங்கியது

4-ஜி செயல்பாட்டுத் திட்டத்தின் கீழ் திருள்ளூர் மாவட்டத்தில் 4-ஜி செல்பேசி சேவையை பிஎஸ்என்எல் தொடங்கியுள்ளது.  நொச்சிலி, கொளத்தூர், பள்ளிப்பட்டு, திருவெள்ளைவாயல், பொன்னேரி, அத்திப்பேடு, அண்ணாமலைச்சேரி, திருப்பாளைவனம், இளவெம்பேடு, காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம், வீராணத்தூர், ஸ்ரீகாளிகாபுரம், வங்கனூர், ஆர்கே பேட்டை, செம்பேடு, பூனிமாங்காடு, கோரமங்கலம், ஆகிய பகுதிகளில் இந்த சேவை 2024 ஜூலை 5 அன்று தொடங்கப்பட்டது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சென்னை தொலைபேசி, தலைமைப் பொது மேலாளர் பாப்பா சுதாகர்ராவ், இந்த சேவைகளைத் தொடங்கிவைத்தார்.  இந்த நிகழ்ச்சியில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சென்னை அதிகாரிகளும், தொழில்துறை தலைவர்களும் கலந்து கொண்டனர்.

தற்சார்பு இந்தியா முன்முயற்சியான மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய 4ஜி சேவை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மத்திய அரசால் நிதியளிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கான செலவு ரூ.16.25 கோடியாகும்.

டிஜிட்டல் பயன்பாட்டில் உள்ள பாகுபாட்டை நீக்கி ஊரகப் பகுதிகளிலும் தொலைதூரப் பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு அதிகாரம் அளிப்பது இந்த நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க முயற்சியை இது காட்டுகிறது. இந்தப் பகுதிகளில் 4ஜி சேவைகளின் அறிமுகம், கல்வி, வணிகம், குடிமக்களுக்கு அதிகாரம் ஆகியவற்றில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை தொலைபேசியின் IX.2 திட்டத்திற்கு 2,114 4-ஜி கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த 4ஜி சேவைகள்  விரைவில் சென்னை, திருவள்ளூர்,  காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களையும்  உள்ளடக்கியதாக இருக்கும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – � ...

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – அமெரிக்கா பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் அதிகரித்து வரும் ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இண� ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட முடியும்: ஜேபி நட்டா சமூகத்தின் முன்னேற்றத்திற்காக, ஆன்மிகமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைந்து செயலாற்ற ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே ப� ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே பெரிய அச்சுறுத்தல்; பிரதமர் மோடி பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். இதற்கு எதிராக ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள� ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களு� ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களுக்கான அடிக்கல் ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்� ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை அதிகரிக்கும் விழிஞ்ஞம் துறைமுகத்தை திறந்த பிரதமர் பேச்சு கேரளாவின் திருவனந்தபுரத்தில், விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைத்த ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...