கோல் இந்தியா நிறுவனத்தின் சார்பில் 1645 குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை

கோல் இந்தியா லிமிடெட்சமூகத்திற்கு சேவை செய்வதற்கான தனது உறுதிப்பாட்டைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. கொவிட் தொற்றுப் பாதிப்புக் காரணமாக பெற்றோரை இழந்து படிப்பைத் தொடர முடியாத 1645 குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்காக பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) முன்முயற்சியான சிஐஎல் ஆஷிஸ் (ஆயுஷ்மான் சிக்ஷா சஹாயதா) என்ற திட்டத்தை கோல் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதன் கீழ் உதவித் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

பணியில் இருக்கும்போது குடும்ப உறுப்பினர்களை இழந்த 424 பயனாளிகளுக்கு கருணை அடிப்படையில் நியமனக் கடிதங்களையும் கோல் இந்தியா லிமிடெட் வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கை துன்பத்தில் உள்ள அந்தக்  குடும்பங்களை ஆதரிக்கும்.

இந்த உதவித் தொகைகளும் பணி நியமனக் கடிதங்கள் இன்று (03-08-2024) உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இந்திய உச்சநீதிமன்றத்தின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில்வழக்குகளைத் தீர்ப்பதற்காக லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்களை நடத்துவதற்கான ஒரு தனித்துவமான முயற்சி 2024 ஜூலை 29 முதல் 2024 ஆகஸ்ட் 03 வரை மேற்கொள்ளப்பட்டது. சிறப்பு லோக் அதாலத் நிறைவு விழாவின் போது கோல் இந்தியாவின் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சிறப்பு நிகழ்ச்சியின்போது 25 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகைக்கான மாதிரி காசோலைகளும்கருணை அடிப்படையில் பணி நியமனக் கடிதங்களும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் தனஞ்சய் ஒய் சந்திரசூட்மத்திய சட்டம் – நீதித்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோரால் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள்,  அதிகாரிகள்மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற அதிகாரிகள்,  நிலக்கரி அமைச்சகத்தின் பிரதிநிதிகள்சட்ட அமைச்சகத்தின் பிரதிநிதிகள்கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூத்த  பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சிஐஎல் ஆஷிஸ் திட்டத்தின் கீழ்தகுதியான குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ. 45,000/- மதிப்புள்ள உதவித்தொகை நான்கு ஆண்டு காலத்திற்கு வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் தங்கள் படிப்பை முடிக்கவும்அவர்களின் கனவுகளை அடையவும் முடியும். இக்குழந்தைகள் சரிபார்ப்பு ஆவணங்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சமூகத்திற்கு சேவை செய்வதில் கோல் இந்தியா லிமிடெட்ட நிறுவனத்தின் பங்களிப்பு இந்த நிகழ்வின் போது பெரிதும் பாராட்டப்பட்டது.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டீப்பேக் பிரச்சனைக்கு தீர்வு க ...

டீப்பேக் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் – பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான ...

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்த ...

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்தில் பிரதமர் மோடி மகிழ்ச்சி பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் ...

விரிவுரையாளர்களுக்கு சம்பள உய ...

விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது ? அண்ணாமலை கேள்வி 7,360 கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது என்று ...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ...

தைப்பூச திருவிழா அண்ணாமலை வாழ் ...

தைப்பூச திருவிழா அண்ணாமலை வாழ்த்து அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி; உலகெங்கும் உள்ள தமிழ் ...

சூரிய மின் உற்பத்தியில் மூன்றா ...

சூரிய மின் உற்பத்தியில் மூன்றாவது இடம் – பிரதமர் மோடி உலகளவில் சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தை ...

மருத்துவ செய்திகள்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...