கேரளாவின் திருவனந்தபுரத்தில், விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, “இந்த துறைமுகம், கேரளாவுக்கு மட்டுமின்றி இந்த தேசத்திற்கே பொருளாதார ஸ்திரத்தன்மையை கொண்டு வரும்,” என, தெரிவித்தார்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இம்மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்ஞம் என்ற இடத்தில், 8,867 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட சர்வதேச துறைமுகம் கட்டப்பட்டுள்ளது.
‘அதானி குழுமம்’ கட்டியுள்ள இந்த துறைமுகத்தை நேற்று திறந்து வைத்து, பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்து பேசியதாவது:
மிகப்பெரிய சரக்கு கப்பல்கள் வந்து செல்லும் வகையில், இந்த துறைமுகம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதுவரை நம் நாட்டின், 75 சதவீத சரக்கு பரிமாற்ற நடவடிக்கைகள் வெளிநாட்டு துறைமுகங்களில் நடத்தப்பட்டன. இதன் விளைவாக நம் நாட்டிற்கு குறிப்பிடத்தக்க வருவாய் இழப்பு ஏற்பட்டது.
விழிஞ்ஞம் துறைமுகத்தால் இந்த நிலை மாற உள்ளது. வெளிநாடுகளில் செலவிடப்பட்ட நிதி இப்போது உள்நாட்டு வளர்ச்சிக்குச் செலவிடப்படும்.
விழிஞ்ஞம் மற்றும் கேரள மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும். நாட்டின் செல்வம் அதன் குடிமக்களுக்கு நேரடியாகப் பயனளிப்பதை உறுதி செய்யும்.
இந்த துறைமுகத்தின் சரக்கு பரிமாற்ற மையத்தின் திறன், எதிர்காலத்தில் மூன்று மடங்கு அதிகரிக்கும்.
இவ்வளவு பெரிய பிரமாண்ட துறைமுகத்தை, அதானி குழும தலைவர் கவுதம் அதானி குஜராத்தில் கட்டாமல், கேரளாவில் கட்டியுள்ளார்.
இது குஜராத் மக்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளிக்கும். அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க கவுதம் அதானி தயாராக இருக்க வேண்டும்.
மாநில துறைமுக அமைச்சர் வி.என்.வாசவன், பெருநிறுவனமான அதானி குழுமத்தை கம்யூனிஸ்ட் அரசின் கூட்டாளி என குறிப்பிடுவது, நாட்டில் நிகழ்ந்து வரும் மாற்றங்களைக் காட்டுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன், அதானி குழும தலைவர் கவுதம் அதானி, காங்., – எம்.பி., சசி தரூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |