மேக் இன் இந்தியா திட்டத்தின் 10 ஆண்டுகள்

‘மேக் இன் இந்தியா’ முன்முயற்சி மின்னணுத் துறையின் வளர்ச்சிக்கு சீராக பங்களிப்பு செய்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்துள்ளது. தொழில்நுட்பத்  திறன்களை மேம்படுத்தியுள்ளது. தற்சார்பு இந்தியா பார்வைக்கு  உதவியுள்ளது. மேக்-இன்-இந்தியா இயக்கத்தின் 10 வது ஆண்டு விழாவில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் எஸ்.கிருஷ்ணன், இந்தியாவின் மின்னணுத் துறையில் மேக் இன் இந்தியா முன்முயற்சியின் மிகப்பெரிய தாக்கம் பற்றி எடுத்துரைத்தார். மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் துறைகளில் ஒன்றாக மின்னணுத்துறை உருவெடுத்துள்ளது என்று அவர் கூறினார்.

மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் இந்தியாவின் ஏற்றுமதி, 2014-15 ஆம்ஆண்டில் 38,263 கோடி ரூபாய் என்பதிலிருந்து கணிசமாக உயர்ந்து தற்போது 2.41 லட்சம் கோடி ரூபாயாக அல்லது 29.1 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது மற்ற ஏற்றுமதி துறைகளின் வளர்ச்சியை விட கணிசமாக வேகமடைந்துள்ளது என்று அவர் கூறினார்.

2014-15 ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்கப்பட்ட செல்பேசிகளில் 26% மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. மீதமுள்ளவை இறக்குமதி செய்யப்பட்டவை. இன்று இந்தியாவில் விற்பனையாகும் செல்பேசிகளில் 99.2% இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை.

இந்தியாவில் ஆண்டுக்கு 325 முதல் 330 மில்லியன் செல்பேசிகளை உற்பத்தி செய்கிறோம். சுமார் ஒரு பில்லியன் செல்பேசிகள்  இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன.

2023-24-ம் ஆண்டில் செல்பேசி ஏற்றுமதி சுமார் 1.2 லட்சம் கோடியாக இருந்தது. இது 2014-15-ல் இருந்ததை விட 77 மடங்கு அதிகமாகும். 2014-15-ம் ஆண்டில் செல்பேசி ஏற்றுமதி 1,566 கோடி ரூபாயாக இருந்தது, இது இப்போது சுமார் 1,20,000 கோடி ரூபாயை எட்டியுள்ளது என்ற விவரங்களை  கிருஷ்ணன் தெரிவித்தார்.

செல்பேசி துறைக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம் குறித்து பேசிய திரு கிருஷ்ணன், நாங்கள்  ஒட்டுமொத்த உற்பத்தி இலக்கை தாண்டிவிட்டோம் என்றார். உற்பத்தி மதிப்பு ரூ. 6 லட்சத்து 661 கோடியை எட்டியிருப்பதாகவும் முதலீட்டின் மொத்த மதிப்பு ரூ.9,100 கோடியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். திட்டத்தின் அசல் இலக்குபடி.மொத்தவேலைவாய்ப்பு 1,22,613 ஆக உள்ளது.எனவே இதுவும் மேக் இன் இந்தியாவின் வெற்றிக் கதைகளில் ஒன்றாகும். இன்று மின்னணுத் துறை நாடு முழுவதும் சுமார் 1.2 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவில் குறைகடத்தி உற்பத்தித் தளத்தை அமைப்பது என்பது மேக் இன் இந்தியா திட்டத்தின் மற்றொரு பெரிய பகுதியாகும் என்றும், இதை அடைய  இந்தியா அறுபது ஆண்டுகளுக்கு மேலாக  முயன்று வருகிறது என்றும் திரு கிருஷ்ணன் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று தி ...

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று திட்டம் நாடு தழுவிய வெற்றி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, புதுதில்லியில் உள்ள புத்த ஜெயந்தி ...

மேக் இன் இந்தியா திட்டத்தின் 10 ...

மேக் இன்  இந்தியா திட்டத்தின் 10 ஆண்டுகள் 'மேக் இன் இந்தியா' முன்முயற்சி மின்னணுத் துறையின் வளர்ச்சிக்கு ...

ரூ 130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ர ...

ரூ 130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் சுமார் ரூ.130 கோடி மதிப்பிலான மூன்று பரம் ருத்ரா ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...