ஹரியானாவில் அமித் ஷா ஆற்றிய உரை

ஹரியானா மாநிலம் மகேந்திரகரில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கௌரவ மாநாட்டில் (பிச்ச்தா வர்க் சம்மான் சம்மேளன்) மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார். ஹரியானா முதலமைச்சர் திரு. நயப் சிங் சைனி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சர்கள் திரு ராவ் இந்தர்ஜித் சிங், திரு கிரிஷன் பால் குர்ஜார் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, ஹரியானா மண் இந்தியாவில் மூன்று விஷயங்களுக்கு பிரபலமானது என்றார்   ராணுவத்தில் அதிகபட்ச வீரர்கள், அதிக விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிக உணவு தானிய உற்பத்தி ஆகியவற்றுக்கு ஹரியானா புகழ்பெற்றது என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமராக திரு நரேந்திர மோடி பதவியேற்றபோது, இந்த அரசு,தலித்துகள், ஏழைகள், பின்தங்கியவர்களுக்கான அரசு என்று கூறியதை நினைவுகூர்ந்தார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முதலாவது வலுவான பிரதமர் நாட்டிற்கு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் உள்ள 71 பேரில், 27 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கியதன் மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி ஓபிசி சமூகத்திற்கு அரசியலமைப்பு உரிமைகளை வழங்கியுள்ளதாக அவர் கூறினார். கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளிகள் மற்றும் நீட் தேர்வுகளில் முதல் முறையாக 27 சதவீத இடஒதுக்கீட்டை அரசு வழங்கியுள்ளதாகவும் திரு அமித் ஷா குறிப்பிட்டார்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்காக ஹரியானா அரசும் பல திட்டங்களை செயல்படுத்துவதாக  அமித் ஷா தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...