வரி விகிதங்கள் தொடர்பாக மக்களின் கோபங்களை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அரசு பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி உள்ளதால் அதனை குறைப்பதில் சிக்கல் நிலவுகிறது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
ம.பி., மாநிலம் போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: வரி விகிதங்களை பூஜ்ஜியமாக கொண்டு வர விரும்புகிறோம். ஆனால், இந்தியா முன் உள்ள சவால்கள் தீவிரமானது. அதில் இருந்து வெளிவர வேண்டியது உள்ளது.
விரி விகிதங்கள் தொடர்பாக மக்களின் கோபங்களை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அதனை குறைப்பதை, நம் முன் உள்ள சவால்கள் தடுக்கிறது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு நிதி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு நிதித்தேவைகளுக்கு தற்போதைய வரி நடைமுறை முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |