முயற்சியின் அளவே தியானம்

 சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி என்றால் யோக நூல்களைப் படிப்பது என்று பொருள் அல்ல. அது வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியதாகும்.

 

விதைகளை நசுக்கினால் தான் எண்ணெய் எடுக்க முடியும். கற்களைச் செதுக்கினால்தான் சிலையாக்க முடியும். அதைப் போல இறைவனை நினைத்து, யோக நூல்கள் கூறும் ஒழுக்க நெறிகளையும், பயிற்சிகளையும் கடைபிடித்தால்தான் ஆன்மீக ஒளி மனதில் தோன்றும்.

இளையவரும், முதியவரும், உடல்நலம் இல்லாதவறும், ஊனமுற்றவரும் கூட தொடர்ந்து நீடித்த பயிற்சியால் தியானத்தில் வெற்றிபெற இயலும் என்று விதரயோக பரதீபிகை கூறுகிறது. பயிற்சி செய்பவனுக்கு உயிர்ச்சி கிட்டும்.

யோக நூல்களைப் படிப்பதால் மட்டும் தியானத்தில் வெற்றி கிட்டாது. யோக முறைகளைத் தொடர்ந்து பயிற்சி செய்தால் தான் தியானத்தில் வெற்றிபெற முடியும்.

முயற்சியும் பயிற்சியும் இடைவிடாத சாதனையுமே தியானத்தில் ஒருவரை நிலைபெற வைக்க இயலும். சந்நியாசியைப் போல் உடுத்துவதாலோ, பேசுவதாலோ தியானத்தில் வெற்றி பெற முடியாது.

புலன் வழி இன்பங்களைவிட புலன்கள் வலிமையானவை. புலன்களைவிட மனம் வலிமையானது. மனதைவிட புத்தி வலிமையானது. புத்தியைவிட ஆன்மா வலிமையானது. ஆசையை சீரமைத்தால் ஆன்மாவை உணரலாம். இந்த நிலையை அடையத் தொடர்ந்து பயிற்சிதான் தேவை.

விதை நிலம், எரு, தண்ணீர், காவல் இவைகள் அனைத்தும் சரியாக இருந்தால் தான் விளைவு நன்றாக இருக்கும். அதுபோல ஒரு குரு அத்வைத தத்துவம் என்ற ஒருமைத் தத்துவ விதையை உள் அறிவு என்றும், நிலத்தில் ஊன்றினால் அது வளர்ச்சிப் பெற, ஒழுக்கம் என்ற உரமிட வேண்டும். அறிவை ஒன்றிப் பழகும் ஒருமை பழக்கமான தியானமும், ஆராய்ச்சி என்ற தண்ணீரும் பாய்ச்ச வேண்டும். அறிவை ஒன்றச் செய்து உறுதியான அசைவற்ற நிலையடைவதே தியானத்திற்குத் தேவையாக இருக்கிறது.

ஆகையால், அறிவு சலனப்பட்டுக் காம, குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் ஆறு குணங்களில் எதுவாயினும் பார்த்துக் கொள்ளும் விழிப்பு நிலையாகிய காவல் புரிய வேண்டும்.

இவையனைத்தும் முயற்சிக்கும் பயிற்சிக்கும் ஏற்றபடி தியானம் என்ற விளைவு உண்டாகும்.

முயற்சிச் சிறகுகளை முடிவில்லாமல் அசைத்துக் கொண்டிருக்கும்போது, முடியாதது எதுவுமில்லை.

முயற்சி என்பது முன்னேறத் துடிப்பவர்களின் மந்திர சொல். முயற்சியே வெற்றிக்கு நீ இடும் மூலதனம், முயற்சியும் பயிற்சியும் தான் சாதாரண மனிதனை மாமனிதனாக சாதனையாளனாக உயர்த்துகிறது.

ஒரு முத்துச் சிப்பி மழைத்துளியை மெதுவாக நல் முத்தாக மாற்றுகிறது. அதற்கு குறைந்தபட்சம் ஏழு வருடங்கள் எடுத்துக் கொள்கிறது. அந்த முத்துச் சிப்பியைப்போலவே நாமும் பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் தியானத்தைப் பழக வேண்டும். சிறிது கடினம் தான். சோதனைகள் வரலாம். சோதனைகளைச் சாதனையாக்கலாம்.

நன்றி : பானுகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...