முயற்சியின் அளவே தியானம்

 சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி என்றால் யோக நூல்களைப் படிப்பது என்று பொருள் அல்ல. அது வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியதாகும்.

 

விதைகளை நசுக்கினால் தான் எண்ணெய் எடுக்க முடியும். கற்களைச் செதுக்கினால்தான் சிலையாக்க முடியும். அதைப் போல இறைவனை நினைத்து, யோக நூல்கள் கூறும் ஒழுக்க நெறிகளையும், பயிற்சிகளையும் கடைபிடித்தால்தான் ஆன்மீக ஒளி மனதில் தோன்றும்.

இளையவரும், முதியவரும், உடல்நலம் இல்லாதவறும், ஊனமுற்றவரும் கூட தொடர்ந்து நீடித்த பயிற்சியால் தியானத்தில் வெற்றிபெற இயலும் என்று விதரயோக பரதீபிகை கூறுகிறது. பயிற்சி செய்பவனுக்கு உயிர்ச்சி கிட்டும்.

யோக நூல்களைப் படிப்பதால் மட்டும் தியானத்தில் வெற்றி கிட்டாது. யோக முறைகளைத் தொடர்ந்து பயிற்சி செய்தால் தான் தியானத்தில் வெற்றிபெற முடியும்.

முயற்சியும் பயிற்சியும் இடைவிடாத சாதனையுமே தியானத்தில் ஒருவரை நிலைபெற வைக்க இயலும். சந்நியாசியைப் போல் உடுத்துவதாலோ, பேசுவதாலோ தியானத்தில் வெற்றி பெற முடியாது.

புலன் வழி இன்பங்களைவிட புலன்கள் வலிமையானவை. புலன்களைவிட மனம் வலிமையானது. மனதைவிட புத்தி வலிமையானது. புத்தியைவிட ஆன்மா வலிமையானது. ஆசையை சீரமைத்தால் ஆன்மாவை உணரலாம். இந்த நிலையை அடையத் தொடர்ந்து பயிற்சிதான் தேவை.

விதை நிலம், எரு, தண்ணீர், காவல் இவைகள் அனைத்தும் சரியாக இருந்தால் தான் விளைவு நன்றாக இருக்கும். அதுபோல ஒரு குரு அத்வைத தத்துவம் என்ற ஒருமைத் தத்துவ விதையை உள் அறிவு என்றும், நிலத்தில் ஊன்றினால் அது வளர்ச்சிப் பெற, ஒழுக்கம் என்ற உரமிட வேண்டும். அறிவை ஒன்றிப் பழகும் ஒருமை பழக்கமான தியானமும், ஆராய்ச்சி என்ற தண்ணீரும் பாய்ச்ச வேண்டும். அறிவை ஒன்றச் செய்து உறுதியான அசைவற்ற நிலையடைவதே தியானத்திற்குத் தேவையாக இருக்கிறது.

ஆகையால், அறிவு சலனப்பட்டுக் காம, குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் ஆறு குணங்களில் எதுவாயினும் பார்த்துக் கொள்ளும் விழிப்பு நிலையாகிய காவல் புரிய வேண்டும்.

இவையனைத்தும் முயற்சிக்கும் பயிற்சிக்கும் ஏற்றபடி தியானம் என்ற விளைவு உண்டாகும்.

முயற்சிச் சிறகுகளை முடிவில்லாமல் அசைத்துக் கொண்டிருக்கும்போது, முடியாதது எதுவுமில்லை.

முயற்சி என்பது முன்னேறத் துடிப்பவர்களின் மந்திர சொல். முயற்சியே வெற்றிக்கு நீ இடும் மூலதனம், முயற்சியும் பயிற்சியும் தான் சாதாரண மனிதனை மாமனிதனாக சாதனையாளனாக உயர்த்துகிறது.

ஒரு முத்துச் சிப்பி மழைத்துளியை மெதுவாக நல் முத்தாக மாற்றுகிறது. அதற்கு குறைந்தபட்சம் ஏழு வருடங்கள் எடுத்துக் கொள்கிறது. அந்த முத்துச் சிப்பியைப்போலவே நாமும் பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் தியானத்தைப் பழக வேண்டும். சிறிது கடினம் தான். சோதனைகள் வரலாம். சோதனைகளைச் சாதனையாக்கலாம்.

நன்றி : பானுகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...