மஹாராஷ்டிராவில் ரூ 50,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

மஹாராஷ்டிராவின் வாஷிம், மும்பை மற்றும் தானேயில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு இன்று (அக்.,05) பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.வாஷிமில், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறை தொடர்பான ரூ.23,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று(அக்.,05) மதியம் 1.30 மணியளவில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்க உள்ள திட்டங்கள் விபரம் பின்வருமாறு:

* 12,200 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட உள்ள தானே மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். மொத்த நீளம் 29 கிமீ ஆகும்.

* ரூ. 3,310 கோடி செலவில் சேதா நகர் முதல் ஆனந்த் நகர் வரையிலான கிழக்கு நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு அடிக்கல் நாட்டுவார். ரூ.700 கோடி செலவில் கட்டப்படவுள்ள தானே மாநகராட்சியின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

* பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் 18வது தவணையை மோடி விடுவிக்கிறார். 9.4 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியுதவி வழங்கப்படும்.

* மகா சம்மான் நிதி யோஜனாவின் 5வது தவணையை பிரதமர் மோடி விடுவிக்கிறார். இதனால், பயனாளிகளுக்கு ரூ.2,000 கோடி வழங்கப்படும்.

* விவசாய உள்கட்டமைப்பு நிதியின் கீழ் சுமார் 1,920 கோடி ரூபாய் மதிப்பிலான 7,500 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

* 1,300 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் 9,200 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

* பஞ்சாரா சமூகத்தின் பாரம்பரியத்தின் அடையாளமான பஞ்சாரா பாரம்பரிய அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

* ரூ.2,550 கோடி செலவில் நவி மும்பை விமான நிலையத்தின் முதல் கட்ட திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதனால், சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்டவை கட்டப்பட உள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...