பிரதமரின் மத்திய மீன்வளர்ப்பு மேப்பாட்டுத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒப்புதல்

பிரதமரின் மத்திய மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நீர்வாழ் உயிரின வளர்ப்பு பூங்காக்கள் நிறுவப்பட்டுள்ளன.  இது மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு மதிப்புச் சங்கிலியின் பல்வேறு அம்சங்களுடன் கூடிய பன்முக மீன்வளத்தை உள்ளடக்கியதாகும் .தரமான விதைகள் மற்றும் தீவன உற்பத்தி, அறுவடைக்கு முந்தைய மற்றும் பிந்தைய உள்கட்டமைப்பு, வர்த்தகம், சரக்கு போக்குவரத்து, சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி மேம்பாடு, புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பக் காப்பகம், அறிவு பரவலாக்கம், பொழுதுபோக்கு ஆகியவற்றின் மையமாக நீர்வாழ் உயிரின பூங்காக்கள் திகழ்கின்றன.

கடந்த நான்கு நிதியாண்டுகளில் (நிதியாண்டு 2020-21 முதல் நிதியாண்டு 2023-24 வரை) மற்றும் நடப்பு நிதியாண்டு (நிதியாண்டு 2024-25) மொத்தம் ரூ.682.6 கோடி செலவில் மொத்தம் 11 ஒருங்கிணைந்த நீர்வாழ் உயிரின பூங்காக்களை அமைக்க மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் மீன் வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீர்வாழ் உயிரின  பூங்காக்கள் தமிழ்நாடு , ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், அசாம், சட்டீஸ்கர் உள்ளிட்ட 11 மாநிலங்களில் அமைக்கப்படுகின்றன.தமிழ்நாட்டில் நீர்வாழ் உயிரின பூங்காவுக்கு ரூபாய் 127.71 கோடி அனுமதிக்கப்பட்டு உள்ளது.

பிரதமரின் மீன் வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம், கடந்த ஐந்து நிதியாண்டுகளில் (2020-21 முதல் 2024-25 வரை) தமிழ்நாட்டிற்கு ரூ.1156.15 கோடி மதிப்பிலான 48 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் மொத்த பங்களிப்பு ரூ.448.65 கோடியாகும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் இதில் அடங்கும்.

மாநிலங்களவையில் இன்று மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இந்த பதிலை அளித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வேலை வாய்ப்புத் திருவிழா – பி� ...

வேலை வாய்ப்புத் திருவிழா – பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்பு பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட ...

பஹல்காம் தாக்குதல் குறித்து பி� ...

பஹல்காம் தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம் ராகுல்காந்தி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு ...

பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் சிங� ...

பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியை ...

ராகுல் காந்தி, கார்கேவால் தங்கள ...

ராகுல் காந்தி, கார்கேவால் தங்கள் கட்சியை கட்டுப்படுத்த முடியவில்லையா?- பாஜக எம்.பி. கேள்வி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு ...

இங்கே இருக்கும் இஸ்லாமியர்கள் � ...

இங்கே இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் மதம் மாறிய இந்துக்கள் – எச் ராஜா மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ...

திருமணத்தின் மூலம் இந்தியாவுக� ...

திருமணத்தின் மூலம் இந்தியாவுக்கு வந்த 5 லட்சம் பாகிஸ்தான் பெண்கள்: தீவிரவாதத்தின் புதுமுகம் ‘‘​பாகிஸ்​தானை சேர்ந்த 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பெண்​கள், திரு​மணத்​தின் ...

மருத்துவ செய்திகள்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...