பிரதமரின் மத்திய மீன்வளர்ப்பு மேப்பாட்டுத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒப்புதல்

பிரதமரின் மத்திய மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நீர்வாழ் உயிரின வளர்ப்பு பூங்காக்கள் நிறுவப்பட்டுள்ளன.  இது மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு மதிப்புச் சங்கிலியின் பல்வேறு அம்சங்களுடன் கூடிய பன்முக மீன்வளத்தை உள்ளடக்கியதாகும் .தரமான விதைகள் மற்றும் தீவன உற்பத்தி, அறுவடைக்கு முந்தைய மற்றும் பிந்தைய உள்கட்டமைப்பு, வர்த்தகம், சரக்கு போக்குவரத்து, சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி மேம்பாடு, புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பக் காப்பகம், அறிவு பரவலாக்கம், பொழுதுபோக்கு ஆகியவற்றின் மையமாக நீர்வாழ் உயிரின பூங்காக்கள் திகழ்கின்றன.

கடந்த நான்கு நிதியாண்டுகளில் (நிதியாண்டு 2020-21 முதல் நிதியாண்டு 2023-24 வரை) மற்றும் நடப்பு நிதியாண்டு (நிதியாண்டு 2024-25) மொத்தம் ரூ.682.6 கோடி செலவில் மொத்தம் 11 ஒருங்கிணைந்த நீர்வாழ் உயிரின பூங்காக்களை அமைக்க மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் மீன் வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீர்வாழ் உயிரின  பூங்காக்கள் தமிழ்நாடு , ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், அசாம், சட்டீஸ்கர் உள்ளிட்ட 11 மாநிலங்களில் அமைக்கப்படுகின்றன.தமிழ்நாட்டில் நீர்வாழ் உயிரின பூங்காவுக்கு ரூபாய் 127.71 கோடி அனுமதிக்கப்பட்டு உள்ளது.

பிரதமரின் மீன் வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம், கடந்த ஐந்து நிதியாண்டுகளில் (2020-21 முதல் 2024-25 வரை) தமிழ்நாட்டிற்கு ரூ.1156.15 கோடி மதிப்பிலான 48 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் மொத்த பங்களிப்பு ரூ.448.65 கோடியாகும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் இதில் அடங்கும்.

மாநிலங்களவையில் இன்று மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இந்த பதிலை அளித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சிறுபான்மையினருக்கு மிகப்பெரி ...

சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நம் நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு, இங்கு சிறுபான்மையினர் ...

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிற ...

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிறார் மோடி; வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு ஜூலை 23ம் தேதி பிரதமர் மோடி பிரிட்டன் செல்கிறார். ...

பிற்போக்குத்தனமான பழக்க வழக்க ...

பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களில் இருந்து பெண்களை விடுவிக்க வேண்டும்: மோகன் பகவத் பேச்சு நாட்டின்வளர்ச்சிக்கு பெண்கள்முக்கியமானவர்கள். அவர்களை பிற்போக்குத்தனமானபழக்கவழக்கங்களில் இருந்து விடுவிக்க வேண்டும் ...

டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடி ...

டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடிக்கைக்கு இந்தியா பாராட்டு; வலுவான ஒத்துழைப்பு என வரவேற்பு டி.ஆர்.எப்.,க்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை, இரு நாடுகளின் பயங்கரவாத ...

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்க ...

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு திரிணமுல் காங்., தடை: பிரதமர் மோடி பேச்சு மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி ...

சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள ...

சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளில் பிரதமர் மரியாதை சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு ...

மருத்துவ செய்திகள்

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...