மீனவருக்கான கடன் மற்றும் நிதியுதவி

மத்திய அரசு, 2018-19 ஆம் ஆண்டில், மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போரின் நடைமுறை மூலதனத் தேவைகளை பூர்த்தி செய்ய வேளாண் கடன் அட்டை வசதியை விரிவுபடுத்தியது.  தற்போதைய நிலவரப்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 4,26,666 வேளாண் கடன் அட்டைகள் மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போருக்கு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

மேலும், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத்துறை, 2018-19 ம் நிதியாண்டு முதல், மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பல்வேறு மீன்வள உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சலுகை அடிப்படையில் ஆண்டு 3 சதவீதம் வரை வட்டி மானியத்துடன் வழங்கப்படுகிறது.

மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போருக்கு விபத்து காப்பீட்டுத் தொகை வழங்கி, காப்பீட்டுத் தொகை முழுவதையும் பயனாளியிடமிருந்து எந்தப் பங்களிப்பும் இன்றி, மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்கின்றன. குழு விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையில் (i) இறப்பு அல்லது நிரந்தர முழு ஊனத்திற்கு எதிராக ரூ.5,00,000/-, (ii) நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டால் ரூ.2,50,000/- மற்றும் (iii) விபத்து ஏற்பட்டால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் செலவுகள் ரூ.25,000/- வழங்கப்படுகிறது. கடந்த மூன்று நிதியாண்டுகள் (2021-22 முதல் 2023-24 வரை) மற்றும் நடப்பு நிதியாண்டில் (2024-25), 131.30 இலட்சம் மீனவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

28.06.2024 வரை தமிழ்நாட்டில் 2,43,768 மீனவர்களுக்கு வேளாண் கடன் அட்டைகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் குழு விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 21,99,335 மீனவர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, ரூ.10,23,31,305 கோடி பிரீமியம் தொகை செலுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று, கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப் ...

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என சைப்ரஸ் ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்ச ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர் முதல்வர் ஸ்டாலின் கற்பனை திறனை பலப்படுத்தி கொள்வதற்காக, தேவையில்லாத ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் கடந்த 2017ம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கடல்நீர் ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்; சைப்ரஸில் தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட பொருளாதார மற்றும் ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – பிரதமர் மோடி இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரத ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரதமர்.. வரலாற்றில் இதுவே முதல் முறை மோடியை திரும்பி பார்த்த உலக நாடுகள் பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா உள்ளிட்ட ...

மருத்துவ செய்திகள்

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...