பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது நல்லது. சுருக்கமாகச் சொன்னால் சாப்பாட்டில் காரசாரம் இருக்கலாம், ஆனால் பேச்சில் காரசாரம் இருக்கக் கூடாது. நம்மில் நிறையப் பேர் செய்யும் மற்றெhரு தவறு, தொலைக்காட்சியைப் பார்த்துக் கொணடே சாப்பிடுவது. பல

நேரங்களில் என்ன சாப்பிடுகிறோம் என்றே தெரியாது. சில நேரங்களில் நம்முடைய தட்டில் உள்ளதைச் சாப்பிடுகிறோமா, அடுத்தவருடைய தட்டில் இருப்பதை எடுத்துச் சாப்பிடுகிறோமா என்பதும் தெரியாது. அந்த அளவுக்குத் தொலைக்காட்சியில் தங்களைத் தொலைத்து கொள்வோரும் உண்டு.

அதே நேரத்தில் ருசிக்காகச் சாப்பிடுகிறோமா, ருசித்துச் சாப்பிடுகிறோமா என்பதையும் நாம் சிந்திக்கலாம். ருசியால் கேடில்லை என்றால் சரி. ஆனால் அந்த ருசியால் கேடு ஏற்படும் என்றால் அத்தகைய உணவுப் பதார்த்தத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. ருசித்துச் சாப்பிடுவது என்பது, உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு உணவைக் கடித்து மென்று அனுபவித்துச் சாப்பிடுவது.

யாரொருவர் உடல் உழைப்பின்றிச் சாப்பிடுகிறாரோ
அவர் மற்றவர்களின் உணவைத் திருடியவர்

 

– அண்ணல் மகாத்மா காந்தியடிகள்

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்துமாறு உடலை வருத்தி உழைக்க பலருக்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம். குறைந்த பட்சம் தினமும் அவரவர்களால் இயன்ற வீட்டு வேலைகளைச் செய்த பின் சாப்பிட்டால், " உழைத்துச் சாப்பிட்டதாக" எடுத்துக் கொள்ளலாமே. அதற்கும் வாய்ப்பில்லை என்றால் உடற் பயிற்சி செய்ய வேண்டியது அவசியம் முக்கியம்.

ஆகவே என்ன சாப்பிடுகிறோம் , எங்கு சாப்பிடுகிறோம் என்ற கேள்விகளுடன் எதற்காகச் சாப்பிடுகிறோம் என்பதையும் யோசித்து, பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால், உடல் நலத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க அது பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும், பசி வந்தால் பத்தும் பறக்கும், பசித்திரு தனித்திரு விழித்திரு

One response to “பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...