பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது நல்லது. சுருக்கமாகச் சொன்னால் சாப்பாட்டில் காரசாரம் இருக்கலாம், ஆனால் பேச்சில் காரசாரம் இருக்கக் கூடாது. நம்மில் நிறையப் பேர் செய்யும் மற்றெhரு தவறு, தொலைக்காட்சியைப் பார்த்துக் கொணடே சாப்பிடுவது. பல

நேரங்களில் என்ன சாப்பிடுகிறோம் என்றே தெரியாது. சில நேரங்களில் நம்முடைய தட்டில் உள்ளதைச் சாப்பிடுகிறோமா, அடுத்தவருடைய தட்டில் இருப்பதை எடுத்துச் சாப்பிடுகிறோமா என்பதும் தெரியாது. அந்த அளவுக்குத் தொலைக்காட்சியில் தங்களைத் தொலைத்து கொள்வோரும் உண்டு.

அதே நேரத்தில் ருசிக்காகச் சாப்பிடுகிறோமா, ருசித்துச் சாப்பிடுகிறோமா என்பதையும் நாம் சிந்திக்கலாம். ருசியால் கேடில்லை என்றால் சரி. ஆனால் அந்த ருசியால் கேடு ஏற்படும் என்றால் அத்தகைய உணவுப் பதார்த்தத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. ருசித்துச் சாப்பிடுவது என்பது, உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு உணவைக் கடித்து மென்று அனுபவித்துச் சாப்பிடுவது.

யாரொருவர் உடல் உழைப்பின்றிச் சாப்பிடுகிறாரோ
அவர் மற்றவர்களின் உணவைத் திருடியவர்

 

– அண்ணல் மகாத்மா காந்தியடிகள்

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்துமாறு உடலை வருத்தி உழைக்க பலருக்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம். குறைந்த பட்சம் தினமும் அவரவர்களால் இயன்ற வீட்டு வேலைகளைச் செய்த பின் சாப்பிட்டால், " உழைத்துச் சாப்பிட்டதாக" எடுத்துக் கொள்ளலாமே. அதற்கும் வாய்ப்பில்லை என்றால் உடற் பயிற்சி செய்ய வேண்டியது அவசியம் முக்கியம்.

ஆகவே என்ன சாப்பிடுகிறோம் , எங்கு சாப்பிடுகிறோம் என்ற கேள்விகளுடன் எதற்காகச் சாப்பிடுகிறோம் என்பதையும் யோசித்து, பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால், உடல் நலத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க அது பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும், பசி வந்தால் பத்தும் பறக்கும், பசித்திரு தனித்திரு விழித்திரு

One response to “பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...