ரயில்களில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் 1000 பொதுப்பெட்டிகள் இணைப்பு

ரயில்களில் ஏசி வசதி கொண்ட ஏசி1, ஏசி2 அல்லது ஏசி3 வகுப்பு பெட்டிகளை இணைப்பதற்கு பதில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் 1000 பொதுப்பெட்டிகள் ரயில்களில்இணைக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின் போது ரயில்வே துறை தொடர்பாக எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அஸ்வினி வைஷ்ணவ், ஏழைகளின் நலனுக்காகவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்றைக்குரயில்களில் பொதுப்பெட்டிகளை அதிகரி்கக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் 1000 பொதுப்பெட்டிகள் வெவ்வேறு ரயில்களில் இணைக்கப்பட உள்ளன.

மேலும் 10,000 பொதுப்பெட்டிகளை கூடுதலாக தயாரிக்கவும் சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ஏசி முதல்வகுப்பு, இரண்டாம் வகுப்பு அல்லது ஏசி மூன்றாம்வகுப்பு பெட்டிகள் இணைப்பது அதிகரிக்கப்படமாட்டாது. மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் உள்ள 1300 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. உலகின் மிகப்பெரி கட்டமைப்பாக திகழும் ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் ரயில் நிலையத்திட்டம் என்ற திட்டத்தின் கீழ் புதுபபிக்கப்பட உள்ளன.

இந்த திட்டத்தின்கீழ் பெரும்பாலான ரயில் நிலையங்கள் ரூ.700-800 கோடி வரை செலவிடப்பட்டு மறுசீரமைக்கப்படுகின்றன. சில ரயில் நிலையங்கள் ரூ.100-200 கோடி செலவில் மறுசீரமைக்கப்படுகின்றன. இநத திட்டம் முடிவடைந்ததும், இவை மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் இருக்கும். ரயில்வே துறை கட்டமைப்பு முழுவதையும் குறிபபாக ரயில் நிலையங்களையும் நவீன மயமாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்குபதில் அளித்த அஸ்வினி வைஷ்ணவ், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நிலம் கையகப்படுத்தப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும்,”என்றார்.

நாடு முழுவதும் வந்தேபாரத் ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல ரயில்களில் பொதுப்பெட்டிகள் குறைக்கப்பட்டு ஏசி வசதி கொண்ட பெட்டிகளும் அதிகஅளவில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுப்பெட்டிகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இப்போது மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...