ரயில்களில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் 1000 பொதுப்பெட்டிகள் இணைப்பு

ரயில்களில் ஏசி வசதி கொண்ட ஏசி1, ஏசி2 அல்லது ஏசி3 வகுப்பு பெட்டிகளை இணைப்பதற்கு பதில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் 1000 பொதுப்பெட்டிகள் ரயில்களில்இணைக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின் போது ரயில்வே துறை தொடர்பாக எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அஸ்வினி வைஷ்ணவ், ஏழைகளின் நலனுக்காகவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்றைக்குரயில்களில் பொதுப்பெட்டிகளை அதிகரி்கக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் 1000 பொதுப்பெட்டிகள் வெவ்வேறு ரயில்களில் இணைக்கப்பட உள்ளன.

மேலும் 10,000 பொதுப்பெட்டிகளை கூடுதலாக தயாரிக்கவும் சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ஏசி முதல்வகுப்பு, இரண்டாம் வகுப்பு அல்லது ஏசி மூன்றாம்வகுப்பு பெட்டிகள் இணைப்பது அதிகரிக்கப்படமாட்டாது. மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் உள்ள 1300 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. உலகின் மிகப்பெரி கட்டமைப்பாக திகழும் ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் ரயில் நிலையத்திட்டம் என்ற திட்டத்தின் கீழ் புதுபபிக்கப்பட உள்ளன.

இந்த திட்டத்தின்கீழ் பெரும்பாலான ரயில் நிலையங்கள் ரூ.700-800 கோடி வரை செலவிடப்பட்டு மறுசீரமைக்கப்படுகின்றன. சில ரயில் நிலையங்கள் ரூ.100-200 கோடி செலவில் மறுசீரமைக்கப்படுகின்றன. இநத திட்டம் முடிவடைந்ததும், இவை மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் இருக்கும். ரயில்வே துறை கட்டமைப்பு முழுவதையும் குறிபபாக ரயில் நிலையங்களையும் நவீன மயமாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்குபதில் அளித்த அஸ்வினி வைஷ்ணவ், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நிலம் கையகப்படுத்தப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும்,”என்றார்.

நாடு முழுவதும் வந்தேபாரத் ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல ரயில்களில் பொதுப்பெட்டிகள் குறைக்கப்பட்டு ஏசி வசதி கொண்ட பெட்டிகளும் அதிகஅளவில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுப்பெட்டிகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இப்போது மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...