தங்களாலும் மற்றவருக்கு பயனுள்ளதாக இருக்க முடியும் என நிரூபிக்கும் மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளி மாணவர்கள், தங்களாலும் மற்றவருக்கு பயனுள்ளதாக இருக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். இவர்களுக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக நிற்கின்றனர்.

தட்சிண கன்னடா, மங்களூரின் சக்தி நகரில், அரசு சார்ந்த மாற்றுத்திறனாளிகளின் உறைவிடப் பள்ளி உள்ளது. இங்குள்ள மாணவர்களுக்கு கல்வி மட்டும் போதிப்பது இல்லை. கைவினை பொருட்கள் தயாரிக்க கற்றுத்தரப்படுகிறது. இப்பள்ளியில் தேவையற்ற பொருட்களை பயன்படுத்தி, நறுமணமான ஊதுவர்த்தி தயாரிக்கப்படுகிறது.

பள்ளியின் நான்கு ஆசிரியர்களுக்கு, பெங்களூரின், கிராப்டிஞ்சன் பவுண்டேஷன் சார்பில், ஊதுவர்த்தி தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்த இவர்கள், மாணவர்களுக்கு கற்றுத்தருகின்றனர். உறைவிடப் பள்ளியின் 20 மாணவர்கள் ஊதுவர்த்தி தயாரிக்கின்றனர்.

உலர்ந்த பூக்களின் இதழ்களை பொடியாக்கி, ஊதுவர்த்தி தயாரிக்கப்படுகிறது. கோவில், நிகழ்ச்சிகள், மார்க்கெட்களில் பயன்படுத்தப்பட்ட மற்றும் மிச்சமாகும் பூக்களை சேகரிக்கின்றனர். ரோஜா, சாமந்தி, மல்லிகை, செண்டுப்பூ உட்பட, பலவிதமான பூக்கள் பயன்படுகின்றன. இவற்றை ஒரு வாரம் வரை நிழலில் உலர்த்துகின்றனர். அதன்பின் இதை பொடியாக்கி, வாசனை திரவியங்கள், தண்ணீர் சேர்த்து ஊதுவர்த்தி தயாரிக்கப்படுகிறது. ஊதுவர்த்திகளை பேக்கிங் செய்து விற்பனை செய்கின்றனர். இவர்கள் தயாரிக்கும் ஊதுவர்த்திக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பல இடங்களில் இருந்து ஆர்டர் வருகிறது. இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய் கிடைக்கிறது.

யாரையும் சார்ந்திராமல் தங்களாலும் உழைத்து சம்பாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை இவர்களுக்குள் உருவாகிறது. உறைவிடப் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்களின் முயற்சியே இதற்கு காரணம். மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...