டெல்லி மாடல் படம்காட்டும் திமுக

தமிழகத்துக்கு டெல்லி மாடல் கல்வித் திட்டத்தை அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அழைத்துவந்து அறிமுகப்படுத்தி உள்ளது திமுக அரசு. .அதாவது ஏழை எளிய மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் முயற்சியாம் இது.

மக்களின் வாழ்க்கைத்தரம் உயர கல்வி அவசியம். ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகள் இன்றி அனைவருக்கும் அது கிடைக்கப்பெற வேண்டும். பணம் படைத்தவர்களின் பிள்ளைகளுக்கு ஒரு தரம், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு தரம் என்றொரு நிலையெல்லாம் மாறவேண்டும். இடம் பொருள் பார்த்து வருவதல்ல ஞானம். அன்னை சரஸ்வதி ஆடம்பரங்கள், செல்வங்களை பார்த்து வருபவள் அல்ல, ஏழைகளின் இல்லங்களை அதிகம் நேசிப்பவள். ஆனால் தமிழகத்தில் இன்றைய கல்வித் திட்டங்களோ சரஸ்வதிக்கே சவால் விடுபவை. ஆசிரியர்கள் தேர்வில் குளறுபடி, மாணவர்கள் மது போதையில், என்று லஞ்ச லாவண்யங்களால் சீரழிந்து வருகிறது.

இதற்கு மத்தியில்தான் டெல்லி மாடல் என்ற கபட நாடகம் எல்லாம் அரங்கேற்றப்பட்டு வருகிறது. உண்மையில் மாணவச் செல்வங்களின் மீது அக்கறை இருந்திருந்தால் அனைவருக்கும் சமச்சீரான கல்வியை வழங்கவல்ல மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்காமலாவது இருந்திருக்கலாம். அது பணபலம் நிறைந்த கார்ப்ரேட் பள்ளிகளிலிருந்து, ஆடம்பரங்களற்ற அரசு பள்ளிகள் வரை ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை, திறன் மேம்பாட்டு பயிற்சிதனை வழங்கவல்லது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சர்வதேச தரத்தில் வெற்றிகரமாக இயங்கும் அரசு பள்ளியான கேந்திரிய வித்யாலயா மாடலையாவது பின்பற்றி இருக்கலாம் அல்லவா?. மாவட்டத்துக்கு ஒன்றிரண்டு பள்ளிகளையாவது அந்த தரத்தில் நிர்வகித்து இருக்கலாம் அல்லவா?, இல்லையே…

ஏன் மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் கார்ப்பரேட் கல்வி நிறுவனங்களுக்கு இணையான கல்வியை தரவல்ல, கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதையே நோக்கமாக கொண்ட, நவோதையா கல்வி நிறுவனங்களை தமிழகத்தில் எதிர்க்காமலாவது இருந்திருக்கலாம் அல்லவா?. மாவட்டத்துக்கு ஒன்று வீதம் 40க்கும் அதிகமான பள்ளிகள். வருடத்துக்கு 10000க்கும் அதிகமான மாணவர்கள் என்று , கடந்த 15 வருடத்தில் லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலன் அடைந்து இருப்பார்கள் அல்லவா. மாறாக தாயமொழியுடன் ஹிந்தி போன்ற மொழிகள் கூடுதலாக கற்றுத்தரப்படுகிறது என்பதை காரணம் காட்டி எதிர்த்தவர்கள் இவர்கள்.

மாறாக இன்று டெல்லி மாடல் என்று சொல்லி செட்டிங் போட்டு தமிழக மக்களிடம் படம் காட்டுகிறார்கள். இவர்களுடைய பொய்கள் நிறைந்த கபடநாடகம் எல்லாம் வெளுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதே நிதர்சனம்.

நன்றி தமிழ் தாமரை வி.எம் வெங்கடேஷ்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...