நீட் முறைக்கேடுகளைத் தவிர்க்க பாதுகாப்பான தேர்வு முறையை உறுதி படுத்த வேண்டும் – கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

“நீட் முறைகேடுகளைத்தவிர்க்க பாதுகாப்பான தேர்வு முறையை உறுதிப்படுத்தவேண்டும் என்று மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

நீட் முறைகேடு மற்றும் நெட் நுழைவுத்தேர்வு முறைகேடுகள் தொடர்பாக ராதாகிருஷ்ணன் குழு அளித்துள்ள பரிந்துரைகள் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் எம். சண்முகம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதன்கிழமை அளித்துள்ள எழுத்துபூர்வ பதில் வருமாறு:

தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் தேர்வுகளின் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தும் வகையிலும் இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயர்நிலைக் குழு கடந்த அக். 21-இல் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.

பாதுகாப்பான தேர்வை உறுதிப்படுத்த மாநிலங்கள், மாவட்ட அரசு நிர்வாகத்துடன் வலுவான தொடர்பை மேம்படுத்த வேண்டும் என அக்குழு பரிந்துரைத்தது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதி மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்களை அமைத்து என்டிஏ தேர்வுகள் வெளிப்படையாக நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

அதேபோல, “நீட், யுஜிசி நெட் தேர்வுகள் மிக மோசமாக கையாளப்பட்டது தொடர்பாக துறை அளவிலான மறுஆய்வை மேற்கொண்டதா’ என்று மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில், “கடந்த மே மாதம் நடத்தப்பட்ட நீட்-யுஜி தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக வந்த புகார்கள் குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவுட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் பெரிய அளவில் பரவலாக முறைகேடுகள் நடைபெறவில்லை, தேர்வின் நேர்மை சமரசம் செய்யப்படவில்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது” என்று கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...