நீட் முறைக்கேடுகளைத் தவிர்க்க பாதுகாப்பான தேர்வு முறையை உறுதி படுத்த வேண்டும் – கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

“நீட் முறைகேடுகளைத்தவிர்க்க பாதுகாப்பான தேர்வு முறையை உறுதிப்படுத்தவேண்டும் என்று மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

நீட் முறைகேடு மற்றும் நெட் நுழைவுத்தேர்வு முறைகேடுகள் தொடர்பாக ராதாகிருஷ்ணன் குழு அளித்துள்ள பரிந்துரைகள் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் எம். சண்முகம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதன்கிழமை அளித்துள்ள எழுத்துபூர்வ பதில் வருமாறு:

தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் தேர்வுகளின் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தும் வகையிலும் இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயர்நிலைக் குழு கடந்த அக். 21-இல் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.

பாதுகாப்பான தேர்வை உறுதிப்படுத்த மாநிலங்கள், மாவட்ட அரசு நிர்வாகத்துடன் வலுவான தொடர்பை மேம்படுத்த வேண்டும் என அக்குழு பரிந்துரைத்தது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதி மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்களை அமைத்து என்டிஏ தேர்வுகள் வெளிப்படையாக நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

அதேபோல, “நீட், யுஜிசி நெட் தேர்வுகள் மிக மோசமாக கையாளப்பட்டது தொடர்பாக துறை அளவிலான மறுஆய்வை மேற்கொண்டதா’ என்று மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில், “கடந்த மே மாதம் நடத்தப்பட்ட நீட்-யுஜி தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக வந்த புகார்கள் குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவுட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் பெரிய அளவில் பரவலாக முறைகேடுகள் நடைபெறவில்லை, தேர்வின் நேர்மை சமரசம் செய்யப்படவில்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது” என்று கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...