சர்வதேச மாநாட்டில் என் முகத்தை மறைக்க முயற்சிக்கிறேன் – மத்திய அமைச்சர் வேதனை

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. எதிர்க்கட்சிகள் சார்பில் அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று (12-12-24) சாலை பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய மத்தியப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது, “சாலை விபத்து குறித்து சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ளும் போது, நான் எனது முகத்தை மறைக்க முயற்சி செய்கிறேன். விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பதை மறந்து விடுங்கள். ஆனால், விபத்துக்கள் அதிகரித்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ள எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

சமூக அக்கறையின்மை, போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்காதது, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது தான் இந்த சம்பவங்களுக்கு காரணம். மனித நடத்தையில் மாற்றம் ஏற்பட வேண்டும், சமூகம் முன்னேற வேண்டும் மற்றும் சட்டத்தின் விதிகளை அனைவரும் மதிக்க வேண்டும். முறையற்ற டிரக் பார்க்கிங், மோசமான லேன் போன்ற குறிப்பிட்ட சிக்கல்கள் தான், விபத்துகளுக்கு முக்கிய பங்களிக்கிறது. பேருந்து தயாரிப்பில் சர்வதேச பாதுகாப்பு தரங்களைக் கட்டாயமாக்கியுள்ளோம். அவசரகால ஜன்னல்களை உடைப்பதற்குப் பேருந்துகளில் சுத்தியல் பொருத்துதல் உள்ளிட்டவைகளை கட்டாயப்படுத்தியுள்ளோம்.

நிதி ஆயோக் மற்றும் எய்ம்ஸ் அறிக்கையின்படி விபத்து மரணங்களில் 30 சதவீதம் பேர் அவசர மருத்துவச் சிகிச்சை இல்லாததால் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால்தான் பணமில்லாத சிகிச்சை திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் கீழ், வாகன காப்பீடு 7 நாட்களுக்கு, அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் வரை மருத்துவச் செலவை ஈடு செய்ய முடியும்” என்று கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...