தமிழக அரசின் நிதி எங்கே செல்கிறது – அண்ணாமலை கேள்வி

‘தமிழக அரசின் நிதி எல்லாம் எங்கே செல்கிறது என்பதை, மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தெளிவுப்படுத்த வேண்டும்’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அவரது அறிக்கை:

தமிழகம் முழுதும் உள்ள 385 மாவட்ட கல்வி அலுவலகங்களில், இணையதள இணைப்பு கட்டணம் பல மாதங்களாக செலுத்தப்படாததால், இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் சம்பள பட்டியல் தயாரிப்பில் இடையூறு ஏற்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில், தமிழகம் கடன்கார மாநிலமாக மாறி இருக்கிறது.

தமிழகம் 8.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. ‘அரசு வாங்கும் கடன் முழுதும் அன்றாட செலவுகளுக்கு பயன்படுகிறதே தவிர, கடன் வாங்கும் உண்மையான நோக்கத்துக்கு பயன்படுத்தப்படுவதில்லை’ என, கணக்கு தணிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கான இணையதள இணைப்பு கட்டணம் கூட செலுத்த முடியாமல், அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலையில் தமிழக அரசு உள்ளது என்றால், அரசின் நேரடி வரி வருமானத்தையும், ஜி.எஸ்.டி.,யில் தமிழகத்தின் பங்காக கிடைக்கும், 70 சதவீதம் நிதியையும், தி.மு.க., அரசு எந்த வகையில் செலவு செய்கிறது. இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுகிறது. திவாலாகும் நிலையில், தமிழக அரசு உள்ளதா என்பதை, முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...