தொழிலாளர் தங்குமிட திட்டத்திற்கு அனுமதி தந்தவர் மோடி

‘பிரதமர் மோடி தான் தொழிலாளர் தங்குமிட திட்டத்திற்கு அனுமதி அளித்தா[ர்’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக அரசின், ‘சிப்காட்’ நிறுவனம் சார்பில், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்காக, காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகாலில், 18,720 படுக்கைகளுடன் தங்குமிடம் கட்டப்பட்டு உள்ளது.

இதை, முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.

அவர் தன், ‘எக்ஸ்’ தளத்தில், ‘இந்தியாவிலேயே முதல் முறையாக, பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான வீடுகளை வழங்கும் மெகா திட்டத்தை திறந்து வைத்துள்ளோம்’ என, குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், குறைந்த விலையில் வாடகைக்கு தங்குமிட வளாகம் கட்டும் திட்டம், 2020 ஜூலையில் துவக்கப்பட்டது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் சென்னையில் தங்குமிட திட்டமானது, 2021 செப்டம்பரில், பிரதமர் மோடியால் தமிழகத்துக்கு அனுமதிக்கப்பட்ட ஐந்து திட்டங்களில் ஒன்று.

ஸ்ரீபெரும்புதுார் வல்லம் வடகாலில், 707 கோடி ரூபாய் செலவில், 18,720 படுக்கைகள் உடைய தங்குமிட திட்டத்திற்கு, மத்திய அரசின் மானியம், 37.44 கோடி ரூபாய்.

பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து, 498 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது. இதை, முதல்வர் ஸ்டாலின் அறிந்திருப்பார் என்று உறுதியாக நம்புகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...