தொழிலாளர் தங்குமிட திட்டத்திற்கு அனுமதி தந்தவர் மோடி

‘பிரதமர் மோடி தான் தொழிலாளர் தங்குமிட திட்டத்திற்கு அனுமதி அளித்தா[ர்’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக அரசின், ‘சிப்காட்’ நிறுவனம் சார்பில், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்காக, காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகாலில், 18,720 படுக்கைகளுடன் தங்குமிடம் கட்டப்பட்டு உள்ளது.

இதை, முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.

அவர் தன், ‘எக்ஸ்’ தளத்தில், ‘இந்தியாவிலேயே முதல் முறையாக, பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான வீடுகளை வழங்கும் மெகா திட்டத்தை திறந்து வைத்துள்ளோம்’ என, குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், குறைந்த விலையில் வாடகைக்கு தங்குமிட வளாகம் கட்டும் திட்டம், 2020 ஜூலையில் துவக்கப்பட்டது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் சென்னையில் தங்குமிட திட்டமானது, 2021 செப்டம்பரில், பிரதமர் மோடியால் தமிழகத்துக்கு அனுமதிக்கப்பட்ட ஐந்து திட்டங்களில் ஒன்று.

ஸ்ரீபெரும்புதுார் வல்லம் வடகாலில், 707 கோடி ரூபாய் செலவில், 18,720 படுக்கைகள் உடைய தங்குமிட திட்டத்திற்கு, மத்திய அரசின் மானியம், 37.44 கோடி ரூபாய்.

பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து, 498 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது. இதை, முதல்வர் ஸ்டாலின் அறிந்திருப்பார் என்று உறுதியாக நம்புகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உ ...

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி! பஹல்காமில் தாக்குதல் நடந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ தளபதி ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீட ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி காஷ்மீர் எல்லைக் கோட்டுப்பகுதியில் ஒரு சில இடங்களில், ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவா ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவாத தீ.. தண்ணீரால் பதிலடி தந்தது இந்தியா பூமியில் ஒரு சொர்க்கம் இருந்தால், அது இது தான்... ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்ற ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்றுமை குரல் : பயங்கரவாதத்தை ஒடுக்க சூளுரை பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக டில்லியில் நேற்று நடந்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிற ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிறோம் – இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் உறுதி ''இந்த துயரமான நேரத்தில் பிரான்ஸ், இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...