‘நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் சக்திகளை தோற்கடிக்க, ‘தேசம் தான் முதலில்’ என்ற உணர்வோடு செயல்படுங்கள்,’ என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறினார்.
தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் இயற்கை விவசாயிகளின் மாநாட்டில் ஜக்தீப் தன்கர் பேசியதாவது:
இன்று, விவசாயிகள் சில பிரச்சனைகளால் கவலைப்படுவதை நான் காண்கிறேன். சமூகத்தின் எந்தப் பிரிவினரும் கவலைப்பட்டால், அதை நேர்மறையாகவும் தாமதமின்றியும் தீர்க்க வேண்டியது அவசியம். ஜனநாயகத்தில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை ஒன்றே வழி என்று நான் பலமுறை கூறியுள்ளேன்.
நாட்டிற்கு எதிரான சக்திகளைத் தோற்கடிக்க ஒவ்வொரு இந்தியனும் தேசியவாதத்தில் உடைக்க முடியாத நம்பிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாதகமான சக்திகளின் ஒரு மோசமான ஒருங்கிணைப்பை பார்க்கிறேன்.
இத்தகைய சக்திகள் ஒரு கதையைத் தொடங்குகின்றன.அது பின்னர் கிளர்ச்சிகளின் வடிவத்தை எடுக்கும். அத்தகைய சூழ்நிலைகளில் தேசியவாதத்தில் உடைக்க முடியாத நம்பிக்கையை மக்கள் கொண்டிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |