உடன் இருக்கும் அதிகாரியை தரக்குறைவாக பேசுவது திராவிட மாடல் அரசு – ஹெட்ச் ராஜா

”உடன் இருக்கும் அரசு அதிகாரியை தரக்குறைவாக பேசுவது, ஜாதியை சொல்லி திட்டுவது, மனுவை சுருட்டி மக்கள் தலையிலேயே அடிப்பது தான் திராவிட மாடல். இம்மாடலில் சமூக நீதி, சமத்துவம் கிடையாது,” என, மதுரையில் பிராமணர்களை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி நடந்த உண்ணாவிரதத்தில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பேசினார்.

அவர் மேலும் பேசியதாவது: ஜெர்மனியில் யூதர்கள் எவ்வாறு கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனரோ, அதுபோல் தமிழகத்தில் பிராமண சமூகத்தினரை ‘திராவிட மாடல்’ அரசு நடத்துகிறது. அவர்களை பாதுகாக்க அனைத்து சமூகத்தினரும் குரல் கொடுக்க வேண்டும்.

1957ல் தஞ்சையில் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் ‘தமிழ் பிராமணர்களை கொல்ல வேண்டும்’ என ஈ.வெ.ரா., பேசினார். அதைக்கண்டித்து மறுநாளே அன்றைய பிரதமர் நேரு அன்றைய முதல்வர் காமராஜருக்கு கடிதம் எழுதினார். சமூக விரோதிகளே இவ்வாறு பேச முடியும். சமீபத்தில் திருநெல்வேலியில் பூணுால் அறுப்பு நடந்தது.

தமிழகத்தில் இரு முக்கிய பிரச்னைகளாக போதை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் உள்ளன. அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தவறான செய்தி பதிவிட வேண்டாம் என டி.ஜி.பி., கூறுகிறார். இந்த உத்தரவு மக்களுக்கு மட்டுமா சென்னை கமிஷனர் அருணுக்கும் பொருந்துமா என விளக்க வேண்டும்.

‘குற்றத்தில் ஈடுபட்டவர் ஒருவரே’ என ஏற்கனவே அருண் தீர்ப்பு வழங்கி விட்டார். தற்போது அதை விசாரிக்க அமைக்கப்பட்ட மூன்று பெண் அதிகாரிகள் குழு, ஞானசேகரன் தவிர மற்றவர்களும் இருக்கிறார்கள் எனக்கூறுகிறது. விசாரணைக்கு முன்பே கமிஷனர் அருண் எவ்வாறு முடிவுக்கு வந்தார். தமிழக போலீசாரின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு உட்பட்டதாக உள்ளது. பல்கலை செனட் உறுப்பினரான துணை முதல்வர் உதயநிதி ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை.

கள்ளக்குறிச்சியில் பால் வழங்க சென்ற பெண் போதை நபர்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். முதல்வர் ஸ்டாலின் ‘டிவி’யில் தினமும் ‘தகப்பனாக சொல்கிறேன்… போதைக்கு இடம் கொடுக்காதீர்கள்’ என்கிறார். ஆனால் முதல்வராக இளைஞர்களுக்கு சங்கில் சாராயம் ஊற்றுகிறார்.

அனைத்து சமுதாயத்தினரும் வேற்றுமை பார்க்காமல் நம் குழந்தைகளை பாதுகாக்க ஒன்றுபட வேண்டும்.

‘ஒழுக்கமான வாழ்க்கை தேவையில்லை’ என பேசியவர்கள்தான் இன்று திராவிட தலைவர்களாக உள்ளனர். தமிழ்நாடு அழிந்து கொண்டிருக்கிறது. ‘தற்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் இருக்கிறோம்’ என தி.மு.க., கூட்டணியில் உள்ள கம்யூ., கட்சி மாநில செயலாளராக இருந்த பாலகிருஷ்ணன் சொல்கிறார். இதைவிட வெட்கக்கேடு ‘திராவிட மாடல்’ அரசுக்கு தேவையில்லை. முதல்வர் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.