‘சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன’ என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
சட்டசபையில், 6ம் தேதி உரையாற்ற வந்த கவர்னர் ரவி, தேசிய கீதம் பாட வலியுறுத்தினார். சபையில், அ.தி.மு.க., – காங்., எம்.எல்.ஏ.,க்கள், அண்ணா பல்கலை மாணவி பாலியல் சம்பவம் தொடர்பாக, கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
தேசிய கீதம் பாடப்படாத நிலையில், சபையில் இருந்து கவர்னர் வெளியேறினார். ‘கவர்னரின் செயல் சிறுபிள்ளைத்தனம்’ என, முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். ‘இத்தகைய ஆணவம் நல்லதல்ல’ என, முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் நேற்று கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இன்று (ஜன.,13) ஓசூரில் நடந்த வள்ளலார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. 60 ஆண்டுகளாக இரவும், பகலும் சமூக நீதி பேசும் தமிழகத்தில் தொடர்ந்து தலித்துகள் ஒடுக்கப்படுகிறார்கள்.
சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன. இன்றளவும் ஜாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. சமூகநீதியை பாதுகாக்க வள்ளலாரை பின்பற்ற வேண்டும். வள்ளலார் சனாதன தர்மத்தை மீட்டுள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கில மொழி மேம்படுத்தப்பட்டது. சமஸ்கிருதத்தை அழிக்கப் பார்த்தனர். ஆனால் வள்ளலார் மீட்டார். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |