புதல்வருக்கு மட்டுமே முதல்வர் கனவு இருக்க வேண்டுமா – தமிழிசை கேள்வி

வைகோ போன்றோர் ஈழப் பிரச்னை நடந்தபோது ஒரு மாதிரி பேசிவிட்டு, இப்போது போர் வேண்டாம் என்கின்றனர். போர் வேண்டுமா என்பது குறித்தெல்லாம் வைகோவிடம் யாரும் கேட்கப் போவதில்லை.

அதை ராணுவமும், ராணுவ அமைச்சகமும் தான் முடிவு செய்ய வேண்டும். காஷ்மீரை பற்றி மாற்றுக்கருத்து சொல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது; அனைவரும் நாட்டுப்பற்றுடன் செயல்பட வேண்டும்.

ராணுவத்தோடு துணை நிற்போம் என முதல்வர் சொல்லியிருப்பது தவறில்லை. அதில், பிரதமரோடு துணை நிற்போம் என சொல்லி இருக்க வேண்டாமா? இங்கு, ஒரு மாணவனின் சின்ன சாதனையைகூட, முதல்வர் சாதனை என சொல்கிறீர்கள்.

தமிழக அமைச்சரவையை ஊழல் அமைச்சரவை என்று சொன்னால் தவறில்லை என்று சொல்லும் அளவுக்கு, தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஊழல் வழக்குகள் நடந்து வருகின்றன.

தமிழக அமைச்சர்கள் ஒன்பது பேர் மீது வழக்குகள் உள்ளன. மக்கள் வரிப் பணத்தை சுருட்டியவர்கள், தமிழகத்தில் ஆட்சியில் உள்ளனர்.

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாகியும், வேங்கைவயல் சம்பவத்துக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.

புதுக்கோட்டையில் ஜாதி வேற்றுமை கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. சமூக நீதி என்பது தமிழகத்தில் துளியும் இல்லை. இதில் நான்காண்டு கால சாதனை என தி.மு.க., அரசு கொண்டாடி வருகிறது. ஆனால், தெருவில் நின்று மக்கள் திண்டாடி வருகின்றனர்.

புதிதாக வருபவர்களுக்கு முதல்வர் கனவு இருக்கக்கூடாது என முதல்வர் சொல்கிறார். ஏன், உங்கள் புதல்வருக்கு மட்டும் தான் அந்தக் கனவு இருக்க வேண்டுமா?

அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணியை சந்தர்ப்பவாத கூட்டணி என்கிறார் ஸ்டாலின். இக்கூட்டணி சந்தர்ப்பத்துக்கு ஏற்ற கூட்டணி என்பதை அவர் உணர வேண்டும்.

எனக்கு குளிர் ஜுரம் வரும் என அமைச்சர் சேகர்பாபு சொல்கிறார். அதற்காக கவலைப்பட மாட்டேன். அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் திறன், இயற்கையிலேயே எனக்கு வாய்த்துள்ளது.

கலப்பட தண்ணீர் குடித்தால் மட்டும் தான் குளிர் ஜூரம் வரும். தமிழகத்தில் எல்லா இடங்களிலும் கலப்பட குடிநீர் தான் உள்ளது. பெருமை பீற்றிக் கொள்ளும் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம் இது தான்.

அதனால், அமைச்சர் சேகர்பாபு, சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லி, தமிழக மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...