கோவையில் தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா அளித்த பேட்டி: கோவை மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பற்ற நிர்வாகமாக செயல்படுகிறது. 2004-ல் கோவையிலுள்ள என் நண்பருக்கு விதிக்கப்பட்ட வீட்டு வரி 2400 ரூபாய்; ஆனால் இன்று அவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் நோட்டீஸில் 56,000 ரூபாய் கட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்று பெரும்பான்மையான வீடுகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதை, தி.மு.க., எம்.பி.,யே மாநகராட்சி கூட்டத்தில் சொல்லியிருக்கிறார். அப்படி என்றால் இங்குள்ள மாநகராட்சி நிர்வாகத்துக்கும், உள்ளாட்சித் துறை அமைச்சருக்கும் கட்டுப்பாடுகள் இல்லையா.
தமிழக முதல்வரே உங்களுக்கு அரசியலமைப்பு பற்றி தெரிய வேண்டாமா. நிதி அமைச்சரே நினைத்தாலும் ஒரு மாநிலத்துக்கு பணத்தை கூட்டி கொடுக்கவோ, குறைத்துக் கொடுக்கவோ முடியாது.
ஜி.எஸ்.டி., வரி வசூல் செய்யும் போதே 50 சதவீதம் மத்திய நிதியாகவும், 50 சதவீதம் மாநில டி.என்.ஜி.எஸ்.டி.,யாகவும் வசூல் செய்யப்படுகிறது.
அடிப்படை பொருளாதார அறிவற்றவர்களுக்காக கூறுகிறேன். ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சி மக்கள் தொகையைப் பொறுத்து நிதி அமைச்சகம் நிதி ஒதுக்குகிறது.
அப்படி இருக்கையில் எல்லா மாநிலங்களிலும் மக்கள் நலத் திட்டங்கள் இருக்கிறது. ஆனால் இந்தியாவிலேயே மிக அதிகமான கடன் வாங்கி இருக்கிற மாநிலம் தமிழ்நாடு. அதுவும் 2021ல் தி.மு.க ஆட்சிக்கு வரும்பொழுது 4 லட்சத்து 33,000 கோடியாக இருந்த கடன் இப்பொழுது 8 லட்சத்து 88,000 கோடியாக மாறி உள்ளது. வரும் மார்ச்சுக்குள்ளாக இது, 9 லட்சத்து 88 ஆயிரம் கோடியாகும்.
இந்தியாவிலேயே கடனாளி மாநிலம் தமிழகம் தான். இவ்வாறு அவர் கூறினார்.
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |