”தமிழக அரசு எனது போனை ஒட்டு கேட்கிறது”- மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

”தமிழக அரசு எனது போனை ஒட்டு கேட்கிறது” என்று மாநில பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக பா.ஜ.,தலைவராக பொறுப்பேற்ற பிறகு, கோவை வருகை தந்த நயினார் நாகேந்திரன் பேசியதாவது: கூட்டணியை பற்றியும், எத்தனை சீட் என்பதை பற்றியும் யாரும் கவலைப்பட வேண்டாம். அது குறித்து பேஸ்புக், ட்விட்டரில் பதிவு போட வேண்டாம். அது பற்றி பேச வேண்டியது அகில இந்திய தலைமை. அவர்கள் முடிவு செய்வர்.

பேஸ் புக், டிவிட்டரில் போட்டாலும் எப்படியாவது கைது செய்ய வேண்டும், போனில் பேசினாலும் ஒட்டு கேட்க தயாராகி வருகின்றனர். தமிழக அரசு எனது போனை ஒட்டு கேட்கிறது. யார் என்ன செய்கிறார்கள் என்பதை தி.மு.க, அரசு கண்காணிக்கிறது. பா.ஜ., தொண்டர்கள் எல்லோரும் போனில் கொஞ்சம் எச்சரிக்கையாக பேசுவது நல்லது.

இரட்டை இலையோடு, அதிக அளவில் எம்.எல்.ஏ.,க்கள் வரும் தேர்தலில் வெற்றி பெறுவர். 2026 ல், அவுட் ஆப் கன்ட்ரோலில் தான் தி.மு.க., இருக்கும். ஹரியானாவுக்கும், டில்லிக்கும், மத்திய பிரதேசத்துக்கும், உ.பி.,க்கும் அமித்ஷா சென்றார். அங்கு எல்லாம் பா.ஜ., ஆட்சியை கொண்டு வந்தார். தமிழகத்துக்கு வந்துள்ளார்; இங்கும் பா.ஜ., ஆட்சியை கொண்டு வருவார்.

பா.ஜ.,வை வலுப்படுத்தியதில், முன்னாள் தலைவர்களுக்கு பெரும் பங்கு உள்ளது. அ.தி.மு.க., தலைவர்களோடு, தொண்டர்களோடு பயணிக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் கட்சியாக வர வேண்டும். நம் சனாதன தர்மத்தையும், வேதமந்திரங்களையும் பாதுகாக்க வேண்டும். இன்னுமொரு முறை தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நம்மை நாமே பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு, நயினார் நாகேந்திரன் பேசினார்.

முன்னதாக நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில், அவரை சாரட் வண்டியில் 1 கி.மீ.,துாரம் வரை, மேளதாளம், ஆடல்களுடன் அழைத்து வந்து வரவேற்றனர். நிகழ்ச்சியில், பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், பொது செயலாளர் முருகானந்தம், மத்திய அமைச்சர் முருகன், எம்.எல்.ஏ.,க்கள் வானதி, சரஸ்வதி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா நடத்தும் பதில் தாக்குத� ...

இந்தியா நடத்தும் பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் இந்தியா நடத்தும் பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் ...

வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந� ...

வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந்த சண்டையை விடமாட்டோம் நமது நாட்டில் தொடர்ச்சியாக, பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றிய தீவிரவாதிகளை ...

முப்படைகளை களமிறக்கியது இந்தி� ...

முப்படைகளை களமிறக்கியது இந்தியா அத்து மீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு, தகுந்த ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித� ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்த எஸ் 400 பாதுகாப்பு கவசம் பாகிஸ்தான் நேற்று இந்தியா மீது ஏவுகணைகளை வீசி தாக்க ...

பாகிஸ்தான் 5 துண்டுகளாக சிதறும் ...

பாகிஸ்தான் 5 துண்டுகளாக சிதறும்: ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் பாகிஸ்தான் ஐந்து துண்டுகளாகப் பிரிந்து சிதறிவிடும் என்று ஆர்.எஸ்.எஸ்., ...

அனைவரும் விழிப்புடன் இருக்க வே� ...

அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல் '' நாடு முக்கியமான காலகட்டத்தில் பயணித்து வருவதால், அனைத்து ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...