2ஜி ஏலத்தில் எதிர்பார்த்ததை விட குறைவான வருமானம் கிடைத்திருப்பதன் மூலம் ஏற்ப்பட்டிருக்கும் தோல்வி, நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவையே காட்டுகிறது என மாநிலங்களவை எதிர்க் கட்சி தலைவர் அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார் .
மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது “”2ஜி ஏலத்தில் அரசுக்கு ஏற்பட்டுள்ளதோல்வி, தொலைத் தொடர்பு துறையை அரசு தவறாக_கையாள்வதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது . நாட்டின் பொருளாதாரத்தை அரசு எந்தத்திசையில் அழைத்துச்சென்று கொண்டிருக்கிறது என்பதை காட்டும்வகையில் உள்ளது.
ஒரு பொறுப்பான அரசு இதற்க்காக வருத்தப்படும்; காரணங்களை ஆராயும். ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சர்களும், செய்தித் தொடர்பாளர்களும் 2ஜி ஏலம்தோல்வி அடைந்ததால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார் .
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.