எந்த மதத்துக்கு எதிரான கருத்தையும் பாஜக ஏற்காது.

முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படும் விவகாரத்தில் பாஜகவின் தேசிய செய்தித்தொடர்பாளர் நூபுர் சர்மா கட்சியில்இருந்து தற்காலிகமாக நீக்கப்பட் டுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் அமைந்துள்ள கியான்வாபி மசூதி விவகாரம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் அண்மையில்விவாதம் நடைபெற்றது. இதில் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா பங்கேற்றார். அப்போது அவர், முகமது நபி குறித்து அவதூறாகபேசியதாக முஸ்லிம்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

நூபுர் சர்மாவை கண்டித்து உத்தரபிரதேசத்தின் கான்பூரில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கடந்த 3-ம் தேதி கடையடைப்பு நடத்தப்பட்டது. அப்போது இருதரப்புக்கு இடையே கலவரம் வெடித்து பலர்படுகாயம் அடைந்தனர்.

இந்த சூழலில் பாஜக மத்தியஒழுங்கு நடவடிக்கை குழு, நூபுர் சர்மாவுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில், “பாஜகவின் நிலைப்பாட்டுக்கு எதிராக நீங்கள் கருத்துதெரிவித்திருப்பதால் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளோம். கட்சியில் நீங்கள் வகித்தபொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நூபுர் சர்மா கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதே விவகாரம் தொடர்பாக டெல்லி பாஜக ஊடகபிரிவு பொறுப்பாளர் நவீன் ஜிண்டாலும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

நூபுர் சர்மா விவகாரம் குறித்து பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப் பதாவது: இந்தியாவின் பல்லாண்டு கால வரலாற்றில் ஒவ்வொரு மதமும் செழித் தோங்கி வளர்ந் திருக்கிறது. அனைத்து மதங்களையும் பாஜக மதிக்கிறது. எந்தவொரு மதத்தலைவரும் அவமதிக்கப் படுவதை பாஜக கடுமையாக கண்டிக்கிறது.

மதத்தின் கொள்கைகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்கப் படுவதை பாஜக ஒருபோதும் ஏற்காது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை ஊக்குவிக்க மாட்டோம். நாட்டின் ஒவ்வொருகுடிமகனும் அவரவருக்கு விருப்பமான மதங்களை பின்பற்ற இந்திய அரசமைப்பு சாசனம் உரிமை வழங்கியுள்ளது.

இப்போது நாட்டின் 75-வது சுதந்திரதினத்தை கொண்டாடி வருகிறோம். அனைவரும் சமமாக,கண்ணியத்துடன் வாழும்வகையில் மிகச் சிறந்த இந்தியாவை உருவாக்க நாங்கள் உறுதி மேற்கொண்டுள்ளோம். இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை காப்பாற்றி வளர்ச்சியின் பலன்களை அனைத்து தரப்பு மக்களும்பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாட்டின் முன்னேற் றமே முக்கியம். இவ்வாறு அருண் சிங் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...