பெரும் அமளிகிடையே ஆளுநர் உரை தாக்கல் செய்யப்பட்டது

கர்நாடக சட்ட பேரவையில் எதிர்க்கட்சிகளின் பெரும் அமளிகிடையே உரையை படிக்க முடியாமல் போனதால், ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ்.அதை தாக்கல் செய்து விட்டு திரும்பியுள்ளார்

கர்நாடக சட்ட பேரவை கூட்டம் வியாழக்கிழமை பகல் 12 மணிக்குக் கூடியது. சட்டப் பேரவை, மேலவை உறுப்பினர்கள் பங்கேற்ற இக்

கூட்டத்தில் உரையாற்ற ஆளுநர் பரத்வாஜ் வந்தார். உரையை ஆளுநர் பரத்வாஜ் வாசிக்க தொடங்கியதும் மதச்சார்பற்ற ஜனதாதள மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் மொத்தமாக எழுந்து உரையை வாசிக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த அவையில் உரையாற்ற வேண்டாம் என எதிர் கட்சி தலைவர் சித்தராமையா ஆளுநரை நோக்கி கைகூப்பி வேண்டி கொண்டே இருந்தார் . அவர்களை அமைதியாக இருக்கும்படி ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

ஆளும் பாரதீய ஜனதா உறுப்பினர்கள் அமைதியாகவே இருந்தனர். உரையை ஆளுநர் வாசிக்க முயன்றார். ஆனால், தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. சில நிமிடங்கள் அமைதியாக இருந்த ஆளுநர், உரையை அவையில் தாக்கல்செய்வதாக அறிவித்தார். இதை தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டது பிறகு அவையிலிருந்து ஆளுநர் புறப்பட்டு சென்றார்.

ஆளுநரை அனுப்பி-வைத்துவிட்டு தனது இருக்கைக்கு வந்த, பேரவை தலைவர் போப்பையா புத்தாண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர்உரை அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார்.

{qtube vid:= YSmxAAbZysg}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...