சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் செயல் பேச்சு சுதந்திரத்தின்கீழ் வராது.

‘ஆளுநர் ஆர்.என்.ரவியை தரக் குறைவாகப் பேசிய திமுக மேடைப்பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று வலியுறுத்தி காவல்துறையிடம் ஆளுநர் மாளிகை தரப்பிலும், பாஜக தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில்பேசிய திமுகவின் மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து தரக் குறைவாகவும் இழிவாகவும் பேசியதாக வீடியோ இன்று சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில், இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் துணைச் செயலாளர் எஸ். பிரசன்ன ராமசாமி இந்தப்புகாரை அளித்துள்ளார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு அடங்கிய வீடியோவை இணைத்து அவர் அளித்துள்ள புகார்மனுவில், ”ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக அவதூறாகவும், இழிவாகவும், மிரட்டக்கூடிய வகையிலும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார். அவரது இந்தப்பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது சட்டப்பிரிவு 124-ன் கீழ் நடவடிக்கை எடுக்கக்கூடிய (குடியரசுத் தலைவர், ஆளுநர்உள்ளிட்டோருக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பிரிவு) குற்றம். இந்தப் பிரிவின் கீழும் பொருந்தக்கூடிய மற்றபிரிவுகளின் கீழும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு அளித்துள்ள புகாரில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். மேலும், இதுதொடர்பாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ”ஆளுநர் என்பவர் ஒருமாநிலத்தின் அரசியல் சாசனதலைமை. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு, பேச்சு சுதந்திரத்தின்கீழ் நிச்சயம் வராது. எனவே, இந்தவிஷயத்தில் மாநில காவல்துறை கண்ணை மூடிக் கொண்டிருக்காது என நம்புகிறேன். இதேபோன்று ஒருவர் முதல்வர் குறித்து பேசிஇருந்தால் காவல்துறை அமைதியாக இருக்குமா? அந்த நபர் தொடர்ந்து இதுபோன்று இழிவாகபேசி வருகிறார். அவர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்எல்ஏக்கள் பலர் இருந்த மேடையில் அவர் இவ்வாறு பேசி இருக்கிறார். அந்தநபர் அவ்வாறு பேசியதற்கு அமைச்சரும் எம்எல்ஏக்களும்தான் காரணமா என்பதை முதல்வர் விளக்கவேண்டும். அவர் இவ்வாறு பேசிதற்காக இதுவரை யாரும் மன்னிப்பு கோரவில்லை. அவர்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் காவல் துறை தோல்வி அடைந்துள்ளது” என குற்றம் சாட்டியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...