அரசியல் தலையீட்டிலிருந்து சிபிஐ-யை விடுவிப்பது தான் நமது முதல் நடவடிக்கை

அரசியல் தலையீட்டிலிருந்து சிபிஐ-யை விடுவிப்பது தான் நமது முதல் நடவடிக்கை நிலக்கரிசுரங்க ஒதுக்கீடு முறைகேடு குறித்த விசாரணை அறிக்கையை மத்திய சட்டஅமைச்சகத்துடனும், பிரதமர் அலுவலகத்துடனும் பகிர்ந்து கொண்ட சிபிஐ-யின் நடவடிக்கைக்கு கடும்கண்டனத்துக்கு உரியது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நிலக்கரி சுரங்கஊழல் தொடர்பான சி.பி.ஐ விசாரணை அறிக்கையை மத்திய சட்டத் துறை அமைச்சர் அஸ்வினி குமார் பகிர்ந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தநிலையில், இதனை உறுதிபடுத்தும் விதமாக கடந்த வாரம் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கடந்தவாரம் தாக்கல்செய்த அபிடவிட்டில், நிலக்கரி சுரங்கஊழல் குறித்த சிபிஐ விசாரணை அறிக்கையை சட்டஅமைச்சகத்துடனும், பிரதமர் அலுவலகத்துடனும் பகிர்ந்து கொண்டதாக ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது.

இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில் சட்டஅமைச்சர் அஸ்வினிகுமார் மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் பதவி விலகவேண்டும் என்று பா.ஜ.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை அறிக்கையை சட்டஅமைச்சகத்துடன் பகிர்ந்து கொண்டதற்காக சிபிஐ-க்கு கண்டனம் தெரிவித்தன நீதிபதிகள், இது மிகப் பெரிய நம்பிக்கை துரோகம் , வழக்கின் ஒட்டு மொத்த நடவடிக்கையையே உலுக்குவதாக இருக்கிறது , விசாரணை அறிக்கையை அரசுடன் பகிர்ந்து கொண்டதை பற்றி நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் மறைத்தது ஏன்? என கேள்வி எழுப்பினர் , அரசியல் எஜமானர்களின் அறிவுறுத் தல்களை ஏற்று சி.பி.ஐ., செயல்படக்கூடாது என்றும் கூறினர்.

அரசியல் தலையீட்டிலிருந்து சிபிஐ-யை விடுவிப்பது தான் நமது முதல் நடவடிக்கையாக இருக்கவேண்டும் என்றும், சி.பி.ஐ.,யை மீண்டும் சுதந்திரமான அமைப்பாக மாற்றவேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...