ஆகஸ்ட் 1 தேதி அஞ்சலிகூட்டத்துக்கு அத்வானி ஜி வருகை

· சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், ”எங்கள் ஆடிட்டர் ரமேஷ்ஜி படுகொலையைகண்டித்து காங்கிரஸ் ஞானதேசிங்கன்,பாமக ராமதாஸ்,வி.சி திருமாவளவன், வைகோ, சிபிஐ தா.பாண்டியன்,சிபிஎம் டி.கே ரங்கராஜன்,பழ நெடுமாறன் உட்பட்ட அணைத்து தலைவர்களும் பேசியதற்க்கு மனமார்ந்த நன்றிகள்.

திங்கள்கிழமை முழுஅடைப்பு யாருக்கும் எதிரானதல்ல. அரசியல் நாகரீகம், மதநல்லிணக்கம் வேண்டு மென கருதும் தமிழகமக்கள் ஜனநாயகத்திற்கு எதிரான இந்தகொலையை கண்டித்து காட்டும் எதிர்ப்பாக இருக்கவேண்டியே இந்த முழு அடைப்பு.கடந்த 9 மாதங்களில் 4வது படுகொலை இது.

இந்துதலைவர்கள் குறிவைத்து கொல்லப்படுகின்றனர். கொலைநடந்த இடத்தில் மறுநாள் காலை ஒரு கான்ஸ்டபில்கூட இல்லை.நாலுமணி நேரம் கழித்துதான் மோப்பநாய் நாமக்கலில் இருந்து வருகிறது.

சேலத்தில் மோப்பநாய் இல்லையாம். இப்படி காவல் துறை இருந்தால் எந்தகுற்றத்தை தடுப்பார்கள்? இப்பகுதி இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மிகதாமதமாக கொலை நடந்த இடத்திற்குவருகிறார்.

இப்படி இருந்தால் தடையங்கள் அழியவாய்ப்பு ஆகாதா? கேட்டால் டி.சி சொல்கிறார் ‘உங்கள்தொண்டர்கள் எங்களை வேலைசெய்ய விடவில்லை’ என்கிறார். இதைசொல்லவா நீங்கள் இருக்குறீர்கள்?

அப்போ காவல் துறை எதற்கு? ரமேஷ்ஜி உடலை பார்த்துவிட்டு கதறி ரோட்டிற்குவந்து அழுதுள்ளார் அவரின்மாமியார். அப்பொழுது இரண்டுகாவலர்கள் டூவீலரில் போக அவர்களிடம் முறையிட்டுள்ளார்.’போ மா உனக்கு வேலையில்லையா?!’ என்று கண்டு கொள்ளாமல் சென்று விட்டனர்.

காவல்துறைக்கு கொஞ்சம்கூட ஈரம் இல்லை. பிணம்காக்க தான் காவல் துறை இருக்கிறது வேறொன்றுக்கும் பிரயோஜனம் இல்லை. இந்த படுகொலையில் அமைப்புகளுக்கு தொடர்புண்டு. எந்த அமைப்பு என்றுதெரியாது. அத்வானிஜி போனில் பேசினார். வரும் ஆகஸ்ட் 1 தேதி சேலத்தில் அஞ்சலிகூட்டம் வைத்துள்ளோம் அதற்கு அத்வானி ஜி வருவதாக கூறியுள்ளார் .மேலும் பல தேசியதலைவர்கள் வருவார்கள்.

மோடி அடிக்கடி தொலைபேசிசெய்து ‘என்ன நிலவரம்?’ என்று விசாரிக்கிறார். இந்தகாலத்தில் ஒரு தொண்டனுக்காக குமுறும் தலைவர் அவர்தான். அதனால்தான் அவர் உயர்ந்த தலைவர். மற்றபடி ராஜராஜேஸ்வரி தீக்குளித்ததை அறிகிறேன். யாரும் இவ்வாறு செய்ய வேண்டாம்…ஒரு தனிமனிதருக்காக விலைமதிப்பில்லாத பாஜக வினரின் உயிர் போககூடாது. கட்சிக்காக, நாட்டுக்காகதான் நம் உயிர் போகவேண்டும் எனவே யாரும் இவ்வாறு செய்யவேண்டாம்’ என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...