கோவையில் பதற்றம்: பாஜக நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

 கோவையில் பதற்றம்: பாஜக நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு கோயம்புத்தூரில் பா.ஜ.க. நிர்வாகி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை, சிறுவாணி மெயின் ரோடு காளம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் வந்தே மாதரம் தியாகு என்கின்ற தியாகராஜன்.

இவர் கோவை தொண்டாமுத்தூர் ஒன்றிய பா.ஜ.க. தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில், இன்று அதிகாலை யாரோ மர்ம மனிதர்கள் தியாகராஜன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டனர். மர்ம மனிதர்கள் வீசிய பெட்ரோல் குண்டு தியாகு வீட்டின் முன்பகுதியில் விழுந்து வெடித்து சிதறியது. அப்போது, சத்தம் கேட்டு வீட்டில் இருந்த தியாகராஜன் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

பெட்ரோல் குண்டு வீட்டின் முன்பு விழுந்து வெடித்ததால் சேதம் தவிர்க்கப்பட்டது. பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து பேரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், துணை சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அங்கு கிடந்த பெட்ரோல் குண்டின் சிதறல்களை சேகரித்தனர். தியாகராஜன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு முன் விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவில்லை. பெட்ரோல் குண்டை வீசிச்சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து தியாகு வீட்டின் முன்பு பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...