வெண் தாமரைப் பூ

 இதய நோய்
இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை கூடும். இதனுடைய மகரந்தம் தூளை சேகரம் செய்து உள்ளுக்குச் சாப்பிட்டுக் கொஞ்சம் வெந்நீர் அருந்த நாளடைவில் ஆண்மை பெறுவான்.

இருதய நோய் நீங்க கஷாயம்
தேவையான வெண்தாமரை சுமார் ஐந்து இதழ்கள் கொண்டு வந்து உதிர்த்து, உதிர்ந்ததை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, 200 மில்லி அளவு தண்ணீரை அதில் ஊற்றி, அடுப்பில் வைத்து 100 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதனுடன் சர்க்கரை, போதுமான பசும் பால் சேர்த்து காலை – மாலை இருவேளை அருந்தவேண்டும். தொடர்ந்து அரை மண்டலம் 20 நாட்கள் அருந்தி வரும் பட்சம், இருதய நோய்களுக்கும், இருதய வலிமைக்கும் உகந்தது.

இருதய படபடப்பு நீங்க
தேவையான வெண்ணிறமான இதழ்களை ஆய்ந்து எடுத்துப் பொடியாக நறுக்கி ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, சுண்டக் காய்ச்சி இறக்கி, அதில் உள்ள இதழ்களைப் பிழிந்து சாறு எடுத்து வடிகட்டி, வைத்துக்கொண்டு, பிறகு மூன்று கைப்பிடி வல்லாரை இலையைக் கொண்டு வந்து அம்மியில் வைத்து இடித்துக் கசக்கிப் பிழிந்த சாறு மூன்று தேக்கரண்டி அளவு சாற்றை இதழ்களின் பிழிந்த சாற்றில் கலந்து காலை – மாலை தொடர்ந்து பத்து நாட்கள் அருந்தி வர இருதய படபடப்பு நீங்கிக் குணமாகும்.

ஜன்னி ஏற்பட்டால்
வெண்தாமரைக் கசாயம் செய்து குழந்தைகளுக்கு ஒரு சங்கு அளவும், பெரியவர்களுக்கு 50 மில்லி வீதமும், ஒரு நாளைக்கு 3 வேலை கொடுக்க நாளடைவில் ஜன்னி தணிந்து குணம் தெரியும்.

மூளை வளர்ச்சிக்குக் குடிநீர்
முதலில் – தேவையான வெண்தாமரைப்பூ ஒன்றைக் கொண்டு வந்து ஓர் மண் பாண்டத்தில் உதிர்த்துப் போட்டு இதனுடன் 200 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து 100 மில்லி அளவாக சுண்டக் காய்ச்சி வற்ற வைத்து இறக்கி வடிகட்டி, வடிகட்டிய இந்த நீரை ஒரு வேளைக்கு 100 மில்லி வீதம் 3 வேளை அருந்த வேண்டும். இவ்விதமாக அரை மண்டலம் (20 நாட்கள்) அருந்தி வரும் பட்சம் மூளை தொடர்பாக ஞாபக சக்தியும் ஏற்படும். எந்தவிதக் குறைபாடும் இல்லாவிட்டாலும், மூளையின் தீர்க்கமான செயற்பாட்டிற்கு இது உகந்தது.

மனநோய் நீங்க
தேவையான வெண்தாமரையைக் கொண்டுவந்து சுத்தம் செய்து கஷாயம் வைத்து 1 மண்டலம் (4o நாட்கள்) அருந்திவரும் பட்சம் இருதய நோயும், அதோடு மனநோயும் நீங்கிக் குணமாகும்.

நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...