புத்தகயை குண்டு வெடிப்பிலிருந்து நிதீஷ் பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை

 ஆறுபேர் உயிரை பலிகொண்ட பாட்னா தொடர் குண்டு வெடிப்புக்கு தார்மிக பொறுப்பேற்று பிகார் முதல்வர் நிதீஷ்குமார் பதவி விலகவேண்டும் என லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து திங்கள் கிழமை அவர் கூறுகையில், “”பா.ஜ.க பேரணிக்கு போதுமான பாதுகாப்பை பிகார் அரசு வழங்க வில்லை என்பதை, இந்த தொடர்குண்டுவெடிப்பு வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. எனவே இதற்குப் பொறுப்பேற்று முதல்வர் நிதீஷ் குமார் பதவி விலகவேண்டும்.

அவர் தானாகவே முன்வந்து பதவி விலக வில்லை என்றால், மத்திய அரசு இதில் தலையிட்டு பிகார் அரசைக் கலைத்துவிட்டு, அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.

புத்தகயை குண்டு வெடிப்பிலிருந்து நிதீஷ் அரசு துளியும்பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. அதனால்தான் பாஜக பேரணிக்கு விரிவானபாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய அது தவறிவிட்டது.

மாநிலத்தின் தலைநகரில் கூட மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை இந்தகுண்டு வெடிப்பு உணர்த்தியிருக்கிறது” என்று தெரிவித்தார்.

பாஜக பிரதமர்பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்கு, பிகார் அரசு வேண்டுமென்றே போதியபாதுகாப்பை அளிக்காமல் தவிர்த்து விட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர், முன்னாள்பிரதமர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் சிறப்புப்படை பாதுகாப்பை நரேந்திர மோடிக்கும் வழங்க வேண்டும் எனவும், இதற்காக “எதிர் வரும் தேர்தலில் போட்டியிடும் பிரதமர்பதவி வேட்பாளருக்கும் இந்த வகைப் பாதுகாப்பை வழங்கலாம்’ என்று விதிமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செüஹானும், “”நாட்டின் மிகப் பிரபலமான தலைவர் என்பதால், மோடிக்கு வழங்கப்படும் பாதுகாப்பில் சிறு ஒட்டை கூட இருக்கக்கூடாது. எனவே அவரது பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...