புத்தகயை குண்டு வெடிப்பிலிருந்து நிதீஷ் பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை

 ஆறுபேர் உயிரை பலிகொண்ட பாட்னா தொடர் குண்டு வெடிப்புக்கு தார்மிக பொறுப்பேற்று பிகார் முதல்வர் நிதீஷ்குமார் பதவி விலகவேண்டும் என லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து திங்கள் கிழமை அவர் கூறுகையில், “”பா.ஜ.க பேரணிக்கு போதுமான பாதுகாப்பை பிகார் அரசு வழங்க வில்லை என்பதை, இந்த தொடர்குண்டுவெடிப்பு வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. எனவே இதற்குப் பொறுப்பேற்று முதல்வர் நிதீஷ் குமார் பதவி விலகவேண்டும்.

அவர் தானாகவே முன்வந்து பதவி விலக வில்லை என்றால், மத்திய அரசு இதில் தலையிட்டு பிகார் அரசைக் கலைத்துவிட்டு, அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.

புத்தகயை குண்டு வெடிப்பிலிருந்து நிதீஷ் அரசு துளியும்பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. அதனால்தான் பாஜக பேரணிக்கு விரிவானபாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய அது தவறிவிட்டது.

மாநிலத்தின் தலைநகரில் கூட மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை இந்தகுண்டு வெடிப்பு உணர்த்தியிருக்கிறது” என்று தெரிவித்தார்.

பாஜக பிரதமர்பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்கு, பிகார் அரசு வேண்டுமென்றே போதியபாதுகாப்பை அளிக்காமல் தவிர்த்து விட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர், முன்னாள்பிரதமர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் சிறப்புப்படை பாதுகாப்பை நரேந்திர மோடிக்கும் வழங்க வேண்டும் எனவும், இதற்காக “எதிர் வரும் தேர்தலில் போட்டியிடும் பிரதமர்பதவி வேட்பாளருக்கும் இந்த வகைப் பாதுகாப்பை வழங்கலாம்’ என்று விதிமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செüஹானும், “”நாட்டின் மிகப் பிரபலமான தலைவர் என்பதால், மோடிக்கு வழங்கப்படும் பாதுகாப்பில் சிறு ஒட்டை கூட இருக்கக்கூடாது. எனவே அவரது பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.