அரவிந்த் கேஜரிவால் தாம்தொட்ட எந்த விஷயத்தையும் பாதியிலேயே விட்டு விடுகிறார்

 ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த்கேஜரிவால் தாம்தொட்ட எந்த விஷயத்தையும் பாதியிலேயே விட்டு விடுகிறார் , கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஓட்டம் பிடிக்கிறார் என்று நிர்மலா சீதாராமன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாஜக செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கேஜரிவால் கபட நாடகம் ஆடுவதிலும், தன் வசதிக்கேற்ப அரசியல்செய்வதிலும் ஈடுபட்டு வருகிறார். இது போன்ற போக்கு, நாட்டிற்குக் கவலை தரக்கூடியது ஆதாகும். தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை கேஜரிவால் ஆதரிப்பது அவரது மனப் பான்மையை காட்டுகிறது. இது போன்றவரை தேர்வுசெய்வது நாட்டின் நலனுக்கு உகந்ததா?

கேஜரிவால் எதையுமே பாதியிலேயே விட்டுவிடுவார். அவரது இந்திய வருவாய்ச் சேவை (ஐ.ஆர்.எஸ்) பணி பாதியிலேயே நின்றுவிட்டது. ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பையும், ஹசாரேவையும், தில்லிமக்களையும் அவர் நடுவழியிலேயே கைகழுவினார். இப்போது நாடுமுழுவதும் ஆம் ஆத்மி வேட்பாளர்களையும் அவர் கைவிட்டுவருகிறார்.

வெளிநாட்டை சேர்ந்த ஃபோர்டு அறக்கட்டளையிடம் இருந்து நிதிபெற்றது தொடர்பாக அவர் இதுவரை திருப்திகரமான பதிலை கூறவில்லை. எப்போது நிதிபெறப்பட்டது என்பதற்கும் அது எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பதற்கும் கேஜரிவால் பதில்கூறட்டும்.

ஆம் ஆத்மி கட்சியின் பார்வையில் வாராணசி மற்றும் அமேதி ஆகிய இருதொகுதிகள்தான் முக்கியமானவை. நாடுமுழுவதும் ஆம் ஆத்மிகட்சி சார்பில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள் குறித்த அவர்களது நிலை என்ன? அவற்றுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று கேஜரிவால் உணர்த்திவிட்டார் என்றார் நிர்மலா சீதாராமன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...