சட்டவிரோதமாக கட்டடங்கள் கட்டப் படுவதைத் தடுக்க புதிய விதிமுறைகள்

 சட்டவிரோதமாக கட்டடங்கள் கட்டப் படுவதைத் தடுக்க புதிய விதிமுறைகள் வகுக்கப்படும் என, மத்திய நகர்ப்புறவளர்ச்சி, வீட்டு வசதித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

இது குறித்து பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நாடுமுழுவதும் சட்டவிரோத கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், புதிய விதிமுறைகள் வகுக்கப்படும்.

பெங்களூரு, மும்பை, தில்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் சட்டவிரோத கட்டடங்கள் கட்டப்படுவது அதிகரித்துள்ளன. இதனால், விபத்துகள் அதிகரித்து வருகின்றன. எதிர் காலத்தில் கட்டடவிபத்துகள் நடைபெறாத வகையில், கட்டடங்கள் கட்டும்போது கடைப்பிடிக்க வேண்டிய புதிய விதிமுறைகள் வகுக்கப்படும்.

ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடிப்பதா? அல்லது ஒழுங்கு முறைப்படுத்துவதா? என்பது குறித்து புதிய விதி முறைகளில் தெரிவிக்கப்படும். இந்த புதிய விதி முறைகள் ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் வகுத்துள்ள விதிமுறைகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

பயங்கரவாதிகள், அவர்களின் வழிகாட்டிகள் நினைப்பதை பாஜக ஆட்சியில் நிறைவேற்றமுடியாது. எந்த பிரச்னையையும் சமாளிக்க மத்திய அரசு உயிர்ப்புடன் இருக்கிறது. நாட்டில் அமைதி, பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

பொருளாதாரத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. நாட்டில் ரூபாய் மதிப்பு குறைந்து, விலைவாசி உயர்ந்தும், தொழில்முதலீடுகள் இல்லாத நேரத்தில் தான் மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது. பொருளாதார நிலை சீரடைந்ததும் வருமான வரிச்சலுகைகள் தரப்படும் என்றார் வெங்கய்ய நாயுடு.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...