தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் அரைத்து இரண்டையும் ஒரு டம்ளர் நீராகாரத்தில் போட்டுக் கலக்கி, காலையில் ஓர் வேளை மட்டும் ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால், பெரும்பாடு பூரணமாகக் குணமாகும்.
பிரசவித்த தாய்மார்கள் பால் கொடுக்க முடியாத நிலையில் இருந்தால், தரைப்பசலைக் கீரையின் ஒரு கைப்பிடியளவு எடுத்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து, ஒரு டம்ளர் அளவு காய்ச்சிய பசுவின் பாலில் போட்டுக் கரைத்துக் காலை வேளையில் மட்டும் தொடர்ந்து ஏழு நாட்கள் கொடுத்து வந்தால் தாய்பால் சுரக்கும்.
தரைப்பசலைக் கீரையை அரைத்து, அரைத்த விழுதில் கால் பங்களவு மஞ்சளையும் சேர்த்தரைத்து வைத்துக் கொண்டு சிரங்குகளை நன்றாகக் கழுவி சாம்பல் ஒத்தடம் கொடுத்த பின் இந்த மருந்தைச் சிரங்கின் மேல் கனமாகப் பற்றுப் போட்டால் சிரங்கு ஆறிவிடும்.
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.