கரிஃப் பருவ சாகுபடி நிலைமை குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு

தற்போதைய கரீஃப் பருவத்தில் பயறு வகைகள் சாகுபடி பரப்பு அதிகரித்திருப்பது குறித்து  மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இன்று கரீஃப் பருவ சாகுபடி குறித்து ஆய்வு செய்த அமைச்சர், பயறு வகைகள்  குறிப்பாக துவரை, உளுந்து சாகுபடி பரப்பு சென்ற ஆண்டை விட, 50 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்தார். அனைத்து மாநிலங்களிலும் உளுந்து, மைசூர் துவரம்பருப்பு ஆகியவற்றை 100 சதவீதம் கொள்முதல் செய்ய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார்.

வரவிருக்கும் பருவமழை காலம், நிலத்தடி நீர் நிலைமை, விதைகள், உரங்களின் இருப்பு நிலை பற்றி அமைச்சருக்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனர். கரீஃப், ரபி பயிர்களுக்கு உரிய காலத்தில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளிடம் அமைச்சர் சிவராஜ் சிங் செளகான் வலியுறுத்தினார். மாநிலங்களின் உரத் தேவையை பூர்த்தி செய்யுமாறும் அவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும், இந்திய வானிலை ஆய்வு மையம், மத்திய நீர் ஆணையம், உரத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வேலை வாய்ப்புத் திருவிழா – பி� ...

வேலை வாய்ப்புத் திருவிழா – பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்பு பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட ...

பஹல்காம் தாக்குதல் குறித்து பி� ...

பஹல்காம் தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம் ராகுல்காந்தி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு ...

பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் சிங� ...

பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியை ...

ராகுல் காந்தி, கார்கேவால் தங்கள ...

ராகுல் காந்தி, கார்கேவால் தங்கள் கட்சியை கட்டுப்படுத்த முடியவில்லையா?- பாஜக எம்.பி. கேள்வி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு ...

இங்கே இருக்கும் இஸ்லாமியர்கள் � ...

இங்கே இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் மதம் மாறிய இந்துக்கள் – எச் ராஜா மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ...

திருமணத்தின் மூலம் இந்தியாவுக� ...

திருமணத்தின் மூலம் இந்தியாவுக்கு வந்த 5 லட்சம் பாகிஸ்தான் பெண்கள்: தீவிரவாதத்தின் புதுமுகம் ‘‘​பாகிஸ்​தானை சேர்ந்த 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பெண்​கள், திரு​மணத்​தின் ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...