கரிஃப் பருவ சாகுபடி நிலைமை குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு

தற்போதைய கரீஃப் பருவத்தில் பயறு வகைகள் சாகுபடி பரப்பு அதிகரித்திருப்பது குறித்து  மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இன்று கரீஃப் பருவ சாகுபடி குறித்து ஆய்வு செய்த அமைச்சர், பயறு வகைகள்  குறிப்பாக துவரை, உளுந்து சாகுபடி பரப்பு சென்ற ஆண்டை விட, 50 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்தார். அனைத்து மாநிலங்களிலும் உளுந்து, மைசூர் துவரம்பருப்பு ஆகியவற்றை 100 சதவீதம் கொள்முதல் செய்ய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார்.

வரவிருக்கும் பருவமழை காலம், நிலத்தடி நீர் நிலைமை, விதைகள், உரங்களின் இருப்பு நிலை பற்றி அமைச்சருக்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனர். கரீஃப், ரபி பயிர்களுக்கு உரிய காலத்தில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளிடம் அமைச்சர் சிவராஜ் சிங் செளகான் வலியுறுத்தினார். மாநிலங்களின் உரத் தேவையை பூர்த்தி செய்யுமாறும் அவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும், இந்திய வானிலை ஆய்வு மையம், மத்திய நீர் ஆணையம், உரத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கல ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தட ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம் ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...