மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம், இருலட்சம் இளைஞர்கள் பயனடைவர்

 பிரதமரின் வெளி நாட்டுப் பயணங்களின் மூலம், ஏராளமான அன்னியமுதலீடுகள் குவிந்து வருகின்றன,'' என்று தமிழக பா.ஜ.க, தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, மேலும் அவர் கூறியதாவது:மத்தியில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான, பாஜக., அரசு பொறுப்பேற்று, ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி, மத்திய அரசின் பல்வேறு சாதனைகளை, பொது மக்களிடம் தெரியப்படுத்தும் வகையில், சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, 'மகா மக்கள்தொடர்பு இயக்கம்' மூலம், மத்திய அரசின் சாதனைகள், அச்சிடப்பட்ட காகிதங்கள் மூலம், மக்கள்மத்தியில் கொண்டு செல்லப்படும். கட்சி உறுப்பினர்கள், பொது மக்களை நேரடியாக தொடர்புகொண்டு, பாஜக., அரசின் சாதனைகளை எடுத்துரைப்பர்.

பிரதமரின் வெளிநாட்டு பயணங்களின் மூலம், ஏராளமான அன்னியமுதலீடுகள் குவிந்து வருகின்றன. மத்திய அரசின், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம், இருலட்சம் இளைஞர்கள் பயனடைவர்.

மத்திய அரசின் திட்டங்களால், பிரதமர் மோடி, நாட்டை குழிதோண்டி புதைக்க முயல்வதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. உயர்ந்தகோபுரம், மாளிகை கட்டுவதற்கு, ஆழமான அஸ்திவாரம் தேவை. தற்போது, வறுமையில் சிக்கித்தவிக்கும் நாட்டை, மாடமாளிகையாக மாற்றுவதற்கு தேவையான, அஸ்திவாரக் குழியைதான், பிரதமர் மோடி தோண்டுகிறார்.

தமிழக மீனவர் பிரச்னைகளை தீர்க்கும்வகையில், மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.குழந்தை தொழிலாளர் குறித்த சட்டத் திருத்தத்தை எதிர்க்கும், மதிமுக., தலைவர் வைகோ, அவர் எம்.பி.,யாக இருந்தபோது, சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றும், குழந்தை தொழிலாளர்களை காப்பாற்ற, என்ன முயற்சி செய்தார்?

அவர், பாஜக., அரசின் அனைத்து செயல்பாடுகளையும், கண்மூடித்தனமாக எதிர்ப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார்.தற்போதைய அரசியல் சூழலில், தமிழகத்தில் கூட்டணி குறித்து, எந்த முடிவும் எடுக்கமுடியாது; எனினும், எந்தநேரத்திலும் தேர்தலை சந்திக்க தயார் இவ்வாறு, அவர் கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...